• May 01 2024

"ஒரு கனவே நனவாகுவது போல இருக்கின்றது"... மகிழ்ச்சியின் உச்சத்தில் மகேஷ் பாபு... காரணம் இவருடன் இணைவது தானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ராஜமவுலி. 'நான் ஈ' என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை இவரையே சாரும். இப்படமானது இவருக்கு மாபெரும் வெற்றிகளை அள்ளிக் குவித்தது. 


அதுமட்டுமல்லாது இதற்கு முன்னர் இவர் இயக்கியிருந்த ஜூனியர் என்டிஆரின் 'ஸ்டூடண்ட் நம்பர் ஒன்', ராம்சரனின் 'மாவீரன்'  உள்ளிட்ட படங்கள் பிளாக் பாஸ்டர் படங்களாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவரின் பாகுபலி ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகிய இரு படங்களும் உலக அளவில் இவரின் திறமையை பறை சாற்றியது. 

மேலும் சமீபத்தில் இவர் இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' படமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. அதாவது இந்த படத்தில் ஹாலிவுட், பாலிவுட் கோலிவுட், டோலிவுட்  என அனைத்து நடிகர்களையும் களமிறக்கி அசத்தி இருந்தார் ராஜமௌலி. அத்தோடு பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படமும் முதலுக்கு மோசமின்றி பெரியளவிலான வசூலை வாரிக்குவித்திருந்தது. 

இவ்வாறாக தொடர் வெற்றிகளைக் கண்டு வருகின்ற இயக்குநர் ராஜமவுளி தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கும் திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


மேலும் சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா படமானது போதுமான வரவேற்புகளை பெறவில்லை. இதன் காரணமாக ராஜமௌலியுடனான படம் குறித்த எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் மகேஷ் பாபுவுடன் ராஜமவுளி இணையும் இந்தக் கூட்டணிக்கு ஸ்கிரிப்ட் ஆனது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

ஆனாலும் இந்த படமானது ஒரு அதிரடி சாகச படமாக இருக்கும் என ராஜமௌலி தெரிவித்துள்ளார். அதாவது சமீபத்தில் நடந்து வரும் டோராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போதே ராஜமவுளி இது பற்றி பேசி உள்ளார். 


மேலும் அவர் கூறுகையில் "ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இந்தியானா ஜோன்ஸ் போன்ற கிளாசிக் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக மகேஷ்பாபுவின் படம் எடுக்கப்படும்" எனவும் தெரிவித்திருக்கின்றார். அத்தோடு இந்திய வேர்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

இவரைப் போன்றே ராஜமவுளியின் தந்தையான எழுத்தாளர் கே.வி. விஜயேந்திரனும் "காடுகளின் பின்னணிகள் எடுக்கப்படும் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் இன்னும் எழுதி முடிக்கவில்லை" என்று முன்பு ஒருமுறை வெளியறங்கில் தெரிவித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மகேஷ்பாபு ராஜமவுளியுடன் தனது புதிய திட்டம் குறித்து பேசி இருந்தார். அதாவது "அவருடன் பணியாற்றுவது ஒரு கனவு நனவாவது போல" என்று கூறியிருக்கின்றார் மகேஷ் பாபு. மேலும் "ஒரே நேரத்தில் 25 படங்களை எடுப்பது போன்றது அது உடல் ரீதியான கடினமாக இருக்கும் மேலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

இது ஒரு பான் இந்தியா படமாக இருக்கும். பல தடைகளை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு எங்கள் வேலைகளை எடுத்துச் செல்வோம் என்று நம்புகிறேன்" எனவும் மிகவும் நம்பிக்கை மிகுந்த தொனியோடு தெரிவித்திருந்தார் நடிகர் மகேஷ்பாபு.

Advertisement

Advertisement

Advertisement