• May 04 2024

அது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு” - நடிகர் மாதவன் கூறிய விடயத்தால் குழம்பிப்போன நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரேடியோ ஜோக்கியாக தனது கொியரை ஆரம்பித்து முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் மாதவன்.இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. அதிலும் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் இவரை நன்கு பிரபல்யப்படுத்தியது.

மேலும் இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராக்கெட்டரி திரைப்படம்  விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.இருப்பினும் வசூல் ரீதியில் பின்னடைவையே சந்தித்தது.


 இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் மாதவனுக்கு ராக்கெட்டரி படத்தால் நஷ்டம் என்றும், அவர் தன்னுடைய சொந்த வீட்டை விற்று விட்டார் என்று செய்திகளை பரப்பினர். ஆனால் அதில் உண்மையில்லை என்று அவரே வெளியிட்டார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் அவர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு “இப்போது நான் நடிப்பில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறேன். எதிர்காலத்தில் இயக்குநர் ஆவதற்கான வாய்ப்பும் இல்லை. நான் இயக்குநர் ஆனது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு” எனக் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement