• May 06 2024

துபாயில் தீவு ... பிரியா பவானி சங்கர் சொன்ன ஷாக் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சீரியல்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆன அவர் அதன் பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதன்பின், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், ஓ மனப்பெண்ணே, ஹாஸ்டல், யானை, குருதிஆட்டம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார் .


எனினும் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் அகிலன், பத்துத்தல, ருத்ரன், இந்தியன் 2, பொம்மை, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். அதில் அவருக்கு 3.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளார்கள்.அவர்களுக்காகவே தொடர்ந்து புகைப்படங்களிலும்  அவர் வெளியிட்டு வருகிறார்


இடையில் தன்னுடைய கனவு இல்லமான ஈசிஆர் பங்களாவில் காதலருடன் சமீபத்தில் குடியேறினார். இவ்வாறுஇருக்கையில், சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியொன்றில், துபாயில் சொந்தமான ஒரு தீவினை வைத்திருக்கிறீர்களாமே என்று கேள்வி கேட்டுள்ளனர்.


அதற்கு பிரியா, துபாயே என்னோடு தான், டைலி ஒரு கார் யூஸ் பண்றதால கொஞ்சம் கொஞ்சமா பிச்சி வித்துட்டு, இன்னொரு பக்கம் கார் வாங்கிட்டு இருக்கேன் என்று காமெடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement