• May 05 2024

அம்மா கேரக்டர்களில் நடித்து வரும் துளசி பிரபல தெலுங்கு நடிகரைக் காதலிக்கின்றாரா?- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தான் பிரபாஸ் ஸ்ரீனுவும், நடிகை துளசியும். இவர்கள் இருவரும் சமீபகாலமாக நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதாக கூறப்படுகின்றது. இதனால் இருவரும் காதல் சர்ச்சையிலும் சிக்கி வந்தனர்.

அந்த வகையில் பிரபாஸ் ஸ்ரீனு, கொடுத்த பேட்டி ஒன்றில்,  கூறுகையில், "துளசி எனக்கு அம்மா மாதிரி. எங்களைப் பற்றி பொய்யான வதந்திகள் வெளியாகின.  டார்லிங் படத்தின் இருவரும் இணைந்து நடித்த போது, ஷூட்டிங்கின் போது அவர் என் மீது அக்கறை காட்டுவர். மேலும் அவர் ஒரு சிறந்த நடிகை. வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். 


படப்பிடிப்பின் போது அன்பே என்று கேலியாக அழைப்பார். அதை கூட சிலர் தவறாகப் புரிந்து கொண்டனர். எங்களைப் பற்றி வதந்திகள் வந்தபோது  இதுகுறித்து அவர் தான் முதலில் பதிலளித்தார். அதே போல் இது போன்ற வதந்திகளை உன் மனைவியிடம் சொல்லாதே இல்லையேல் அவர் மிகவும் வருத்தப்படுவார் என கூறினார். 

என் மனைவி மிகவும் பக்குவமான மனப்பான்மையுடையவர். என்னை பற்றி நன்கு அவருக்கு தெரியும் அவர் ஒரு மருத்துவர். நான் அவளை காதல் திருமணம் செய்து கொண்டேன். எனவே இதுபோல் காற்றில் பறக்கும் வதந்திகளை அவள் நம்பவில்லை. இதை கேட்டு சிரித்தார் என தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஸ்ரீனு தெரிவித்துள்ளார்.


நடிகை துளசி, தென்னிந்திய மொழிகளில் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்தார். கன்னட இயக்குனர் சிவமணி என்பவரை திருமணம் செய்து கொண்ட துளசி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.


Advertisement

Advertisement

Advertisement