• May 10 2024

வி.ஜே மகேஷ்வரி மறுமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் இது தானா?- கவலையில் ஹவுஸ்மேட்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றி வருகின்றனர். இவர்களில் ரசிகர்களால் மிகவும் அறியப்பட்ட ஹவுஸ்மேட் தான் தொகுப்பாளினி மகேஸ்வரி. இவர் கதை சொல்லும் டாஸ்கில் தனது கதையை சொல்லி முடிக்க முதலே ஹவுஸ்மேட்ஸ் பஸரை அடித்து விட்டனர்.

அதனால் மகேஸ்வரி கதையை சொல்லி முடிக்கவில்லை. ஆனால் இதற்கு முன்னதாக தன்னை பற்றிய அறிமுக வீடியோவில் பேசியிருந்தார் மகேஸ்வரி. அதன்படி, அவரது அப்பாவுக்கு அவரை பிடிக்காததால், விட்டுச் சென்றுவிட, 14-15 வயது வரை பல பாரங்களை சுமந்து வளர்ந்தவர் விஜே மகேஸ்வரி. சிறு வயதில் மிஸ் பண்ணிய விசயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எல்லாமே திருமணம் வாழ்க்கையில் சரி ஆகிவிடும் என நினைத்தவருக்கோ, அங்கும் ஏமாற்றம்தான். பெரிய கனவோடு நடந்த அவருடைய திருமணம் அடுத்த ஒன்றரை வருடத்தில் உடைந்தது.


ஆனாலும் அதில் இருந்து அவருக்கு கிடைத்த சந்தோஷம், அவரது மகன். பின்னர் மகனுக்காகவே வாழ தொடங்கிய மகேஸ்வரி, கொரோனா காலத்தில்தான் மகனுக்கு இன்னும் சேர்த்து வைக்க வேண்டியவை இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளார். வீட்டின் பொருளாதார நிதி, மகனின் கல்விக்கான செலவுகள் என பலவற்றையும் குறித்து யோசித்த மகேஸ்வரி, காஸ்டியூம் டிசைனிங், இண்டீரியர் டிசைனிங் உள்ளிட்ட படிப்புகளை படித்து, அவற்றில் பணிபுரிந்துள்ளார். இப்படி பிஸியான வாழ்க்கையில் தான் இருக்க, மகனின் வளர்ச்சி, பழக்க வழக்கம், ஒழுக்கம் உள்ளிட்டவை குறித்து கவலைப்பட்ட மகேஸ்வரி, மகனை விடுதியில் சேர்த்துவிட்டு பின்னர் மிகவும் மகனை பிரிந்து கவலைப்பட்டுள்ளார். தன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற அப்பா மற்றும்  தன் கணவர் ஆகியோர் கொடுத்த அனுபவங்களால் ஆண்கள் மேல் நம்பிக்கை இழந்த மகேஸ்வரி, ஆண்களே சுயநலவாதிகள் என நினைத்துள்ளார்.

ஆனால் தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த அந்த அழகான ஆணாக, தன் மகனை குறிப்பிடும் மகேஸ்வரி, தன் மகன், தான் சந்தித்த ஆண்கள் போல் அல்லாமல், மிகவும் அன்பான, பொறுப்பான குடிமகனாக, அற்புதமான மனிதராக வளர வேண்டும் என விரும்புகிறார். மகனின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு பிக்பாஸில் விளையாடிவிட்டு வருவேன் என்கிற நம்பிக்கை உள்ளதாக கூறிவிட்டு விஜே மகேஸ்வரி, பிக்பாஸ்க்குள் வந்தார்.

 இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் கதை சொல்லும்போது நிறுத்தப்படுவது குறித்து ஆதங்கப்பட்ட மகேஸ்வரி, இன்னொரு திருமணம் செய்துகொண்டால், புதிதாக வருபவர்கள் தன் மகனை எப்படி பார்த்துக் கொள்வார்கள், அப்போது நமக்கான கமிட்மெண்ட் எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களால்தான் 2-வது திருமணம் பண்ணுவது பற்றி யோசிக்காமல் இருப்பதாகவும் சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement