• May 03 2024

நடிகர் மொட்டை ராஜேந்திரனுக்கு முடி போனதற்கு இது தான் காரணமா..? ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கெடூர வில்லனாக கலக்கி வந்த ராஜேந்திரன் கடைசியில் காமெடியிலும் கலக்க ஆரம்பித்தார்.இவர் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமாகி 100 படங்களுக்கு மேல் அதே பணியை செய்து பின் நான் கடவுள் படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கியவர் மொட்ட ராஜேந்திரன்.

தன் குரலாலும் தன் தோற்றத்தாலும் வித்தியாசமாக இருந்தாலும் தன் நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.இவர் விஜய் அஜித் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்தார்.மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு வேலாயுதம், சிங்கம் 2, ராஜா ராணி, தெறி, ரெமோ என தொடர்ந்து பல படங்களில் நடித்து கலக்கி வந்தார். இடையில் காமெடியனாக கூட சில படங்களில் கலக்கினார்.

தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் படங்கள் நடித்து வந்துள்ளார்.நீங்கள் கொஞ்சம் உத்து கவனித்திருந்தால் தெரியும், தலை என்று மட்டுமின்றி இவருக்கு தாடி, மீசை, ஏன் புருவத்தில் கூட முடி இருக்காது. எந்த காரணத்தால் ஸ்டண்ட் மேன் ராஜேந்திரனுக்கு இந்த நிலை ஏற்பட்டது தெரியுமா?

மேலும் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் ராஜேந்திரன் ஸ்டண்ட் மேனாக பணிபுரிந்து வந்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஒருமுறை மலையாள திரைப்படத்தின் சண்டை காட்சியில் நடித்து வந்தார் ராஜேந்திரன். அப்போது ஒரு காட்சியின் போது ராஜேந்திரன் ஒரு குளத்தில் குதுத்தி ஸ்டண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


உயரமான கட்டிடங்கள், கண்ணாடி, ரோடு, பஸ், ஆட்டோ, மலைமேல் இருந்து என கடினமான இடங்களில் குதிப்பதே ஸ்டண்ட் மேன்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. குளத்தில் குதிப்பது என்ன பெரிய கஷ்டமா? தண்ணீர் தானே என்று அசால்ட்டாக நினைத்து குதித்து ஸ்டண்ட் காட்சியில் நடித்து முடித்தார் ராஜேந்திரன்.

ஆனால், அந்த மலையாள திரைப்படத்திற்காக ராஜேந்திரன் குதித்து ஸ்டண்ட் செய்த குளத்தின் நீரில் நிறைய கெமிக்கல் இராசாயன கலப்பு இருந்திருக்கிறது. அதை யாரும் பெரிதாக கவனிக்கவும் இல்லை. அதனால் ராஜேந்திரன் தன் முடியை இழப்பார் என்றும் எதிர்பார்க்கவில்லை.அத்தோடு அந்த குளத்தில் கலந்திருந்த கெமிக்கல் காரணத்தால் ஏற்பட்ட தாக்கம் ராஜேந்திரனுக்கு அலர்ஜியாக மாறியது.

ராஜேந்திரனுக்கு குளத்தின் கெமிக்கல் நீர் காரணமாக உடலில் அலர்ஜி உண்டானது. இதன் காரணத்தால் தலை, தாடி, மீசை ஏன், புருவத்தின் முடி முதற்கொண்டு முற்றிலும் இழந்தார் ராஜேந்திரன். மேலும், ஏற்கனவே சீரிய உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடல் கொண்டிருந்த ராஜேந்திரன் அவர்களது முகம் ரஃப் அன்ட் டஃப்பாக தான் இருக்கும். இதில், இந்த அலர்ஜி காரணத்தால் முடி இழப்பு நேரிட அவரது முகம் வில்லனுக்கே உரித்தான முகம் போல மாறியது.


அத்தோடு , ராஜேந்திரனின் மொட்டை தலையுடன் மிகவும் பிரபலமான ஒன்று அவரது கரகர குரல். ஆரம்பத்தில் தனது முதல் படத்தின் கதாபாத்திரத்திற்காக அந்த கரடுமுரடான வாய்ஸில் பேசியதாகவும். பின்னர், அடுத்தடுத்த படத்தின் இயக்குனர்களும் அதே குரல் தான் நன்கு உள்ளது என்று கூறி, அப்படியே பேச கூறினார்கள் என்றும் தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

மேலும் இதில், கொடுமை என்னவெனில், நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் பேசுவதை கட்டிலும், பன்மடங்கு அவர் தனது டப்பிங்கின் போது சத்தமாக கரகர குரலில் பேச வேண்டி உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement