• Mar 26 2026

புது ட்ராமா போட்ட ரோகிணிக்கு இந்த நிலையா? மொத்தமா சொதப்பிய மொட்டை மாமா! பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், விஜயா வீட்டுக்கு வந்த பிரவுன் மணி, உங்க அப்பா கூட இருந்த பிசினஸ் பார்ட்னஸ் எல்லாரும் சூழ்ச்சி பண்ணி அவரை ஏமாத்திட்டாங்க மா என சொல்லி அழுகிறார்.மேலும் இப்ப அவரு மலேசியா ஜெயிலில் இருக்காரு என ரோகிணியிடம் சொல்லி அழுகிறார்.

இதைக் கேட்ட ரோகிணி அழுது கொண்டே, என்ன அங்கிள் இப்படி சொல்றீங்க எனக் கேட்க, கரெக்டா சொல்லிவிட்டது தானே சொல்லுறன் என பிரவுன் மணி ஷாக் கொடுக்கிறார்.


இதைக் கேட்ட மீனா, என்னது சொல்லிவிட்டத சொல்றீங்களா எனக் கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

இது தான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ. ரோகிணி பிரவுன் மணி செய்யும் புதிய நாடகத்தை விஜயா வீட்டார் கண்டு பிடிப்பார்களா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement