• May 06 2024

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்க முதலில் கமிட்டாகியிருந்தது இந்த நடிகை தானா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 9 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் தான் மணிரத்னம். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28 -ம் தேதிவெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.


பொன்னியின் செல்வன் கதையில் முக்கியமான கதாபாத்திரம் குந்தவை. இந்த ரோலில் நடிகை த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருப்பார்.

இந்நிலையில் குந்தவை கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது நடிகை கீர்த்தி சுரேஷ் தானாம். ஆனால் கால் சீட் பிரச்சனையால் இப்படத்தில் இவரால் நடிக்க முடியாமல் போனதாம்.ஆனால் த்ரிஷா குந்தவை கதாப்பாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தியிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement