• May 08 2024

ஜனனி அம்மாவின் உண்மையான விருப்பம் இது தானா?- இதனால் தான் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாரா?- குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்தவகையில் ஜிபி முத்து தானாக முதல் வாரமே வெளியேறினார். அதன்பின்  சாந்தி மாஸ்டர், அசல் கோலார், ஷெரினா, ஷிவானி, மகேஷ்வரி, ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ராம் ஆகியோர் வெளியேறிய நிலையில் நேற்று ஜனனி வெளியேறினார்.

இலங்கையை சேர்ந்த பெண்ணான ஜனனி மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் துடிப்பாகவே இருந்தார். அதன் பின் இலங்கை சேனலில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஜனனி, ஏராளமான ரசிகர்களை வளைத்துப் போட்டார்.


ஜனனி உள்ளே வந்ததும் ரசிகர்கள் ஆர்மிகளை உருவாக்கி தெறிக்கவிட்டனர். அவரின் டிக்டாக் வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கினார்கள். நம்ம டிக்டாக் புகழ் ஜிபிமுத்துக்கு அடுத்து அதிகளவில் ஆர்மி ஜனனிக்குத்தான் உருவானது எனலாம்.

இந்த நிலையில் ஜனனி வீட்டை விட்டு வெளியேறியது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதிலும் குடும்பத்தினர் வரும் டாஸ்க்கானது அடுத்த அடுத்த வாரங்களில் நிகழ இருப்பதால் ஜனனியின் பெற்றோர் தாம் வீட்டிற்குள் வரமாட்டோம் என்று கூறியுள்ளார்களாம். இதனால் தான் ஜனனி வெளியேற்றப்பட்டார் எனக் கூறப்பட்டது.


ஆனால் அது உண்மை இல்லை என்றும் ஜனனியைப் பார்ப்பதற்காக அவருடைய அம்மா மிகவும் ஆவலாக இருந்ததாகவும் அவர் ஜனனியின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் ஒரு தாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்பது ஜனனியின் ஆறு வருடக் கனவு என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement