• May 04 2024

ஜெயம் ரவி அந்த ஹாரக்டராக மாறியது இப்படி தானா? தீயாக பரவி வரும் வீடியோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் இலக்கியத்தில் மணிமகுடமாக திகழ்வது பொன்னியின் செல்வன். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அமரர் கல்கி எழுதிய இந்த நாவல் காலங்கடந்து இன்றுவரை பலராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையையும், புனைவையும் கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் பல்லாயிரம் பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் இந்தத் தலைமுறையும் ஆர்வமாக படித்துவருகின்றனர்.

இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிப்பில் கடந்த வருடம் வெளியானது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவர்கள்; தங்களது எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்யவில்லை என்ற வருத்தத்தை தெரிவித்தனர்.

இருப்பினும் படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் சரித்திர நாவல்களை படமாக்குவதற்கு பல இயக்குநர்களுக்கு நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இந்தப் பாகமும் பிரமாண்ட வெற்றி பெறும் என்று ரசிகர்களும், படக்குழுவினரும் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் படத்துக்கான புரோமோஷனில் படக்குழுவினர் மும்மரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி சோழன் (ராஜ ராஜ சோழன்) கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி அந்த கதாபாத்திரமாக எப்படி மாறினார் என்பது தொடர்பான புதிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜெயம் ரவி ரொம்பவே டெடிகேஷனாக இருந்திருக்கிறார் என கமெண்ட் செய்துவருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement