• Apr 30 2024

மாரி செல்வராஜ் வீட்டில் பூஜை அறை இல்லையா?- அதற்கு பதில் என்ன வைச்சிருக்கிறார் தெரியுமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது

முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. 


முதல் இரண்டு படங்களிலேயே மிகப்பெரிய கவனத்தை பெற்றுவிட்ட மாரிசெல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான படம் மெகா ஹிட்டாகி மாரியில் கிராஃபை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

மாரி செல்வராஜை பலரும் இன்னொரு விஷயத்துக்காக புகழ்வார்கள். அது விலங்குகளையும் அவர் நடிக்க வைப்பது. பரியேறும் பெருமாளில் நாய், கர்ணனில் கழுதை ஆகிய விலங்குகளை பயன்படுத்தியிருந்த அவர் மாமன்னன் படத்தில் பன்றிக்குட்டிகளை பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பெரும்பாலானோர் எப்போதும் இந்தச் சமூகத்தில் பன்றியை எப்படி இழிவாக பார்க்கிறார்களோ அதேபோல்தான் ஒடுக்கப்பட்டவர்களையும் பார்க்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்.


மேலும் பல ஆண்டு சினிமா வரலாற்றில் ஒரு கதாநாயகன் கையில் பன்றிக்குட்டி ஒன்று தவழ்ந்ததும் மாமன்னனில்தான் முதல்முறை. மாரி செல்வராஜின் வீட்டில் பூஜை அறை இருக்காது என்பது தெரியவந்திருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் அடிப்படையில் நாத்திகவாதி. அதேபோல்தான் அவர் மனைவி திவ்யாவும் பெரியாரிஸ்ட்டாம். காதல் திருமணம் செய்துகொண்ட இவர்கள் தங்களது திருமணத்தை பெரியவர்களின் வற்புறுத்தலால் கோயிலில் வைக்க ஒத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அதேசமயம் மாரி செல்வராஜின் வீட்டில் பூஜை அறை இருக்காது. அதற்கு மாறாக பன்றிக்குட்டியின் படங்கள் பல இருக்குமாம். ஒருமுறை வீட்டுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் அதை பார்த்துவிட்டு என்ன சார் ஒரே பன்றிக்குட்டி ஃபோட்டோவா வெச்சிருக்கீங்க என கேட்டதற்கு எனக்கு பன்றிக்குட்டிகள்னா அவ்வளவு பிடிக்கும் சார் என்றாராம் மாரி செல்வராஜ். இதனை அவரும், அவரது மனைவி திவ்யாவும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.


Advertisement

Advertisement

Advertisement