rj பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகவே இப் படத்தின் இரண்டாம் பாகத்தினை முன்னணி இயக்குநர் சுந்தர்சி இயக்கி வருகின்றார்.
இப் படத்தின் பூஜை நிகழ்ச்சி திருவிழா போன்று சமீபத்தில் நடந்தது. இதற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் ஒன்று கூடியிருந்தனர். பூஜை நிகழ்வுகள் முடிந்து தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் சூட்டிங் தளத்தில் நயன்தாரா குளறுபடியினை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது படப்பிடிப்பின்போது காஸ்ட்யூம் தொடர்பான பிரச்சினையில் உதவி இயக்குநர் ஒருவரை நடிகை நயன்தாரா மோசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இயக்குநர் சுந்தர். சி படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் தற்போது நயன்தாராவை மாற்றிவிட்டு தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
Listen News!