• May 05 2024

உங்கள் பெற்றோர்கள் உங்களை பெத்தது ஒரு குற்றமா?- மனக்குழப்பத்தில் ரச்சிதா வெளியிட்ட வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


'பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான இவர் பெங்களூரை சார்ந்த இவர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்த நிலையில் திடீரென ரச்சிதா, தினேஷ் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ துவங்கினர்.

இந்நிலையில் ரச்சிதாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆறாவது சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் வீட்டில் நீண்ட நாட்களாக உள்ளே இருந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் தற்போது பங்கேற்று வருகிறார்.


ரச்சித்தா கடந்த சித்திரை திருநாளன்று 22 லட்சம் ரூபாய் மதிப்பில் கார் ஒன்றை வாங்கியிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் முதியோர் இல்லத்துக்கு சென்றுள்ள வீடியோவை பகிர்ந்துள்ள ரச்சிதா, இந்த வயதான குழந்தைகளுடன் செலவழித்த நேரத்தை எனது வாழ்வில் மறக்க முடியாது. உங்கள் பெற்றோர்கள் மேல் ஏன் இந்த கோபம்? அவர்கள் செய்த தவறு என்ன? உங்களை பெத்ததா? இந்த வயதான குழந்தைகள் இப்படி கஷ்டப்படுவதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.


இதற்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. உங்களது பெற்றோர்களை தயவுசெய்து நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு உணவளித்த, அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார். ரச்சிதா மகாலட்சுமியின் இந்த பதிவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement