• May 02 2024

அட நடிகர் செந்திலின் மகன் டாக்டரா..? முதன் முறையாக மனைவியுடன் சேர்ந்து அளித்துள்ள பேட்டி!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 மக்கள் மனதில் இருந்து ஒரு நீங்காத இடத்தை பிடித்த காமெடி நடிகர் என்றால் அது நமது நடிகர் செந்தில் தான். இப்போது கூட நடிகர் செந்தில் பல திரைப்படத்தில் நடித்து தான் வருகிறார்.தமிழ் திரைப்படத்தில் எந்த ஒரு மக்களாலும் மறக்க முடியாத காமெடி நடிகர் என்றால் அது நடிகர் செந்தில் மட்டும் தான்.நடிகர் செந்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகேயுள்ள இளஞ்சம்பூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். அவர் 14 மே 1984 இல் கலைசெல்வியை மணந்தார்.அவருக்கு டாக்டர் மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என இரு மகன்கள் உள்ளனர். அத்தோடு அவரது இரண்டு பேர மகள்கள் 2008 மற்றும் 2014 இல் பிறந்தனர்.

அவர் தனது தந்தையின் திட்டினால் 13 வயதில் தனது கிராமத்தை விட்டு ஓடிவிட்டார்.அவர் முதலில் ஒரு ஆயில் மார்ட்டில் பணிபுரிந்தார்.இதன் பின்னர் ஒரு தனியார் ஒயின் கடையில் பணியாளராக பணிபுரிந்தார்.அதன் பின்னர் நாடகத்தில் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.மேலும் அவர் ஒரு கோயில் இரு தீபங்கள் மூலம் அறிமுகமானார், இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அவரது முதல் படம் 1980 இல் வெளியான இதிக்கரா பக்கி. தமிழ் திரையுலகில் மெல்ல மெல்ல சின்ன சின்ன கேரக்டர்களில் நுழைந்து கடைசியில் மலையூர் மம்பட்டியான் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தார்.


தென்னிந்திய சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்களுடன் பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.மேலும் அவர் வழக்கமாக கவுண்டமணியுடன் படங்களில் இரட்டை வேடத்தில் தோன்றுவார். அவர்கள் இருவரும் சேர்ந்து பல தமிழ் படங்களில் நகைச்சுவை ஜோடியை உருவாக்கியுள்ளனர் மற்றும் தமிழ் சினிமாவின் லாரல் மற்றும் ஹார்டி என்று அறியப்பட்டனர்.2019 ஆம் ஆண்டில், செந்தில் சன் டிவியின் ராசாத்தி மூலம் அறிமுகமாகி தமிழ் தொலைத்தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.


மேலும் எந்த ஒரு மக்களையும் தன்னுடைய நடிப்பால் மகிழ்விக்கும் திறமை கொண்ட நடிகர் என்றால் அது அந்த காலத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த காமெடி நடிகர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணி இருவரும் தான், மேலும் இவர் நடித்து நடித்து இருந்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெரும் என்றும் தயாரிப்பாளர்கள் இடையே ஒரு கருத்து இருந்தது. ஆனால் இப்போது கூட நடிகர் செந்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று நமது சமூக வலைதளத்தில் பல செய்திகள் வெளியாகி வருகிறது.

ஆனால் என்னதான் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்தாலும் இருவரும் நிஜ வாழ்க்கையில் சமீபத்தில் இருந்து பேசுவதில்லை என்று கூட பல செய்திகள் சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியானது.ஆனால் அப்படி எல்லாம் இல்லை என்று நடிகர் செந்தில் மகன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். செந்திலின் மூத்த மகன் மணிகண்டன் பிரபு பல் மருத்துவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, சின்ன வயதில் எனக்கும் நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது.


நடிகர் செந்தில் தன்னுடைய வாழ்க்கையில் என்ன தான் ஒரு பிரபலமான காமெடி நடிகர் என்றாலும் செந்தில் குடும்பத்தில் இருந்து மட்டும் இல்லாமல் நடிகர் செந்தில் வம்சத்தில் இருந்து இது நாள் வரைக்கும் யாருமே படித்ததே இல்லையாம், ஆனால் நடிகர் செந்திலின் மகன் மட்டும் டாக்டர் படிப்பை படித்து முடித்துள்ளார். எனக்குமே கூட அதே தான் ஆசை என்பதாலும் நானும் டாக்டருக்கு படித்தேன்.இதன் பின் “நான் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது ”என்ற ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், எனக்கு மருத்துவத் துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் நான் என்னுடைய துறையிலேயே அதிக கவனம் செலுத்தி விட்டேன்.


செந்தில் மகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொடுத்த பேட்டியில் ....என்னுடைய அப்பா காமெடி நடிகராக மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில்  நல்ல கதாப்பாத்திரத்தில் நடித்ததையே மக்களும் விரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.இப்பொது அப்படி ஒரு படத்தில் தான் நடித்து வருகின்றார். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவரைப் பார்க்க நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். இவ்வளவு வயதானாலும் அவர் எப்போதும் எனர்ஜியுடனும் தன்னம்பிக்கையோடும் நடிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு என்று தெரிவித்து இருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement