• May 03 2024

பல கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள நடிகர் ராம் சரண் இத்தனை தொழில் செய்கிறாரா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு  திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகர் சிரஞ்சீவி. அவரது மகன் என்ற அடையாளத்தோடு தெலுங்கில் படங்கள் நடித்து வருபவர் தான் ராம் சரண்.

இயக்குநர் ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படத்தின் மூலம் ஆஸ்கர் மேடை ஏறியுள்ள ராம் சரண் இப்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தனது 12வது படத்தில் நடித்து வருகிறார்.

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு முன்னர் வரை ரூ.35 முதல் 40 கோடி வரை வாங்கி வந்த ராம்சரண், தற்போது தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டார்.


அத்தோடு நடிகர் சிரஞ்சீவியின் ஒரே மகனாக இவரின் சொத்து மதிப்பு ரூ.1300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஐதராபாத்தில் 25000 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட வீட்டில் ராம்சரண் வசித்து வருகிறார்.

இந்த வீட்டின் மதிப்பு ரூ.40 கோடி இருக்குமாம். அதேபோல் கோடிக்கணக்கில் மதிப்புள்ள கார்களை வைத்துள்ளாராம்.மேலும் இவர் 34 பிராண்டுகளின் விளம்பர தூதராக இருக்கிறார், ஒரு விளம்பரத்திற்கு இவர் ரூ. 1.8 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தும் இவர் டுரூஜெட் என்கிற விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறாராம் ராம் சரண்.


Advertisement

Advertisement

Advertisement