• Apr 28 2024

பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ள IPL 2023- நடனமாடி கலக்கவுள்ள ராஷ்மிகா மற்றும் தமன்னா- வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கார்த்திக்கொண்டிருக்கும் IPL போட்டிகள், இன்று மாலை 6 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்...  இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவே மிக பிரமாண்டமாக துவங்க உள்ளது. 

இந்த IPL கிரிக்கெட் போட்டியின் துவங்க விழாவில், பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக மாறிய,  தமன்னா  மற்றும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா  கலந்து கொண்டு, துவக்க விழாவை தன்னுடைய நடனத்தால் களைகட்ட வைக்க உள்ளதாக, அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.


கிரிக்கெட் ரசிகர்களை மட்டும் அல்லது தமன்னா மற்றும் ராஷ்மிகா ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.இதுகுறித்து இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மார்ச் 31, 2023 அன்று மாலை 6 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா மற்றும் ஜியோ சினிமா இணைந்து நடத்தும், பிரம்மாண்டமான TATA IPL தொடக்க விழாவில் தமன்னாவுடன் மிகப்பெரிய கிரிக்கெட் கொண்டாட்டத்தில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 


இந்த போட்டிகள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான, நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொடருக்கு பின்னர், இந்த முறை நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்  அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளது.


மேலும் இந்த நிகழ்ச்சியில்  தமன்னாவுடன்...ராஷ்மிகா மந்தனாவும் இணைத்து நடனமாட உள்ளார். அதே போல் தொடக்க விழாவில் டைகர் ஷெராஃப், அரிஜித் சிங் மற்றும் கத்ரீனா கைஃப் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement