தமிழ் சினிமாவில் தனது அழகினாலும் நடனத்தினாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகை தான் தமன்னா. இவர் விஜய் அஜித் விஷால் விக்ரம் ஜெயம் ரவி விஷால் சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கின்றார்.
அதிலும் தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் அந்த அவந்திகா கதாபாத்திரத்திற்கு இன்று ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது
அதாவது இப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருந்ததோடு கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் நடித்திருந்தார். இரண்டு பாகங்களாக வெளியாகிய இப்படம் 1000ம் கோடிக்கு மேல் வசூல் செய்து பான் இந்திய அளவில் பேமஸ் ஆனது.
அனுஷ்கா , தமன்னா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவிற்கு, பிரபாஸிற்கு சமமான கதாபாத்திரத்தினை ராஜமௌலி கொடுத்திருப்பார். வாள் சண்டை போடுவதில் இருந்து அவரின் வசனங்களை பல பாராட்டினை பெற்றது. ஆனால், தமன்னாவிற்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட தமன்னாவினை ராஜமௌலி கலாய்த்து பேசி இருக்கிறார். முதலில் தமன்னா ரோலுக்கு ஒரு குரங்கினை தான் தேர்வு செய்தோம். ஆனால், அது மிருகவதை தடுப்பு சட்டத்தில் எதுவும் பிரச்சனை வருமோ என நினைத்தோம்.
தொடர்ந்து, கிராபிக்ஸ் பண்ணலாமா என நினைக்கும் போது அதுவும் படத்தின் அழகினை கெடுக்கும். இதை தொடர்ந்தே, அந்த கதாபாத்திரத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்தோம். கமர்சியலுக்காக காதல் காட்சிகளையும் சேர்த்தோம் எனத் தெரிவித்தார்.இந்த விடயம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!