• May 03 2024

"15 நாள் நாங்க உன் ரூமுக்கு வருவோம், நீ அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணனும்".. இயக்குநரால் கண்ணீர் விட்டு அழுத நடிகை ஜீவிதா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலுமே நடித்துப் பிரபலமானவர் நடிகை ஜீவிதா. அந்தவகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆபிஸ்' சீரியலிலும், 'கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்திருக்கிறார். 


இந்நிலையில் சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்கிற ஆசையுடன் உள் நுழைந்த ஜீவிதாவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் அட்ஜஸ்மெண்ட் செய்தால் ஹீரோயினாக நடிக்க வைத்து அதிக சம்பளம் தருவதாக இயக்குநர் கூறியிருப்பதை சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கின்றார்.


அந்தவகையில் ஷகீலாவுடன் இடம்பெற்ற அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில் "சினிமாவில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் தருவதாக போனில் அழைத்தனர். பாலுமகேந்திராவின் அலுவலகம் பக்கத்தில் தான் தங்களது ஆபிஸ் இருப்பதாக கூறினர். அப்போது சினிமாவுக்கு நான் வந்த புதுசு என்பதால் யாரையுமே எனக்குத் தெரியாது. எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் என நினைத்து உடனே அங்கு ஆட்டோவில் சென்றேன்.


நான் அங்கு சென்றதும் அங்கு இருந்தவர்கள் என்னிடம் நல்லா பேசினாங்க. படத்துல நீங்க தான் இரண்டாவது ஹீரோயின். முதல் ஹீரோயின் நல்ல பிரபலமானவர்னு சொன்னாங்க. எங்களுக்கு ஓகே, இனி நீங்க தான் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றார்கள். 

அதுமட்டுமல்லாது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்னும் சொன்னாங்க. உடனே நான் அட்ஜஸ்மெண்ட்னா என்னனு அவரிடம் கேட்டபோது அந்த இயக்குநர், என்னை நீ அட்ஜஸ்ட் பண்ணனும் என்றால் கேமராமேன், தயாரிப்பாளர், மேனேஜர் ஆகியோருடனும் அட்ஜஸ்ட் பண்ணனும்னு சொன்னாரு. நாங்க எப்போ வேணாலும் உன் ரூமுக்கு வந்துட்டு போவோம்" என்றார்.


மேலும் "தஞ்சாவூர் பக்கத்துல 15 நாள் இது நடக்கும். இதுக்கெல்லாம் ஓகேனா, நான் எதிர்பார்க்காத அளவுக்கு கவர்ச்சிகரமான சம்பளம் தருவதாக கூறினர். அந்த சம்பளத்தோடு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தந்து உங்களை சினிமாவில் எதிர்பாராத உச்சத்திற்கு உயர்த்திவிடுவோம் என்றெல்லாம் சொன்னார்கள். 

அவர்கள் கொஞ்சமும் ஜோசிக்காது அப்படி கேட்டதும் உடனே கண்ணீர் தான் எனக்கு வந்தது. அவர்கள் முன் அழக்கூடாது என்று அங்கிருந்து சட்டென்று அங்கிருந்து கிளம்பிவிட்டேன்" எனவும் கூறியுள்ளார். இவ்வாறாக தனக்கு நிகழ்ந்த அட்ஜெஸ்மெண்ட் குறித்து ஓப்பனாக தெரிவித்துள்ளார் நடிகை ஜீவிதா.

Advertisement

Advertisement

Advertisement