• Jun 01 2025

நடிகை என்றால் ஈஸியாத் தொடலாமா.? நாங்க என்ன பொம்மைகளா..! கடுப்பான நித்யா மேனன்..

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனத் தென்னிந்திய மொழி உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை நித்யா மேனன். கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், கடந்த சில வருடங்களாக திரையுலகில் குறைந்தளவிலான கதாப்பாத்திரங்களில் மட்டுமே தோன்றி வருகின்றார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை நித்யா மேனன், சினிமா உலகில் ஒரு பெண் நடிகை அனுபவிக்கும் துயரங்கள், தவறான பார்வைகள் மற்றும் சமூக எண்ணங்களை மிக நேர்மையாகப் பகிர்ந்துள்ளார்.


நேர்காணலின் போது நித்யா, “ஒரு சாதாரண பெண்ணிடம் நடந்து கொள்வது போல, நடிகையிடம் யாரும் நடந்துக்கொள்ளவதே இல்லை. நாங்க நடிகையாக இருக்கிறதால எல்லாரும் ஈஸியாத் தொட்டிரலாம் என்று நினைக்கிறார்கள்." எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், “நாங்க ஒரு functionக்குப் போனால் ரசிகர்கள் எல்லாரும் ‘கையை கொடுங்க!’ எனக் கேட்கிறாங்க. இந்தக் கேள்வியை சாதாரண பெண்ணிடம் யாருமே கேட்கமாட்டாங்க. ஆனால் நடிகை என்றால் தொடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.” என்றார். 


அவருடைய இந்த நேர்மை மற்றும் உணர்ச்சி கலந்த பேச்சு, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கி வருகின்றது. அந்தவகையில், நித்யா மேனன் நடிப்பில் மட்டுமல்லாமல், உண்மையான எண்ணங்களிலும் தனித்துவமுடையவர் என்பதை இந்த நேர்காணல் மூலம் நிரூபித்திருக்கின்றார். இவர் கதைத்த விடயம், ஒவ்வொரு பெண் நடிகைக்கும் பொருந்தக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement