• May 06 2024

இவரெல்லாம் நடிகர் என்று சொன்னால் என்னால ஏற்றுக் கொள்ள முடியாது- மகேஷ்பாவு மீது செம கடுப்பில் இருக்கும் ஜெயம்ரவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் இறுதியாக பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதில் அருள்மொழி வர்மன் என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலம் இவருடைய மார்கெட்டானது உயர்ந்துள்ளது. மேலும் இவர் இதனை அடுத்து அகிலன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது.


இந்த நிலையில் இவர் நீண்ட காலத்திற்கு முதல விஜய் டிவியில் கொடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் இவரை பேட்டி எடுத்த டிடி இந்த நடிகரெல்லாம் சினிமாவிற்கு எதற்கு வந்தாங்க இப்படி கடுப்பேத்தி விடுகின்றாரே என எந்த ஹீ ரோவையாவது யோசிச்சிருக்கிறீங்களா என்று கேட்டார்.

அதற்கு பதில் கூறிய ஜெயம் ரவி ஆமாம் அந்த நடிகர் சிரிச்சாலும் ஒரே மாதிரி இருக்கம் அழுதாலும் ஒரே மாதிரி இருக்கும் எப்பவுமே ஒரே மாதிரி தான் இருப்பார் என பெயர் சொல்லாமல் கலாய்த்துள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே இவர் நடிகர் மஆகஷ்பாபுவைத் தான் கூறுகின்றார் எனப் புரிந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement