• May 05 2024

அப்படி இருந்தால் சேலை தான் அணிய வேண்டுமா?- புது சர்ச்சையை கிளப்பி விட்ட மஞ்சுவாரியார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் மஞ்சுவாரியார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாகி 3ப்பர் ஹிட் வெற்றி பெற்ற துணிவு படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

 இதற்கு அடுத்ததாக மலையாளத்தில் தற்போது அவர் நடித்துள்ள வெள்ளரி பட்டணம் என்கிற படம் வரும் மார்ச் 24 அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மகேஷ் வெட்டியார் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஒரு கிராமத்து பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


 சமீபத்தில் இந்த படத்தில் நடித்தபோதுதான் தனது இரு சக்கர வாகன உரிமத்தை மஞ்சு வாரியர் பெற்ற நிகழ்வு வைரலானது.அதேசமயம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் பஞ்சாயத்து தலைவர் என்றாலும் பெரும்பாலான காட்சிகளில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தான் நடித்துள்ளார்.

 இது குறித்து மஞ்சு வாரியர் கூறும்போது, “எனக்கு சேலை அணிவது ரொம்பவே பிடிக்கும். சமீபத்தில் நான் சேலை அணிந்து வெளியிட்ட பதிவுக்கு பல லட்சம் லைக்குகள் கிடைத்தன. ஆனால் இந்த படத்தில் நான் ஏற்று நடித்துள்ள சுனந்தா கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது. ஒரு பெண் அரசியல்வாதி என்றால் சேலைதான் அணிய வேண்டுமா என்று கேள்வி கேட்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் இயக்குநர் மகேஷ் வெட்டியாரும் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சமீராவும் வித்தியாசமான ஆடைகளை எனக்காக உருவாக்கி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement