• May 06 2024

அண்ணனுக்காக ஒரு பயோபிக் கதையை எழுதினேன்- என்னது கார்த்தி இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து என்னும் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் தான் கார்த்தி. இதனைத் தொடர்ந்து பருத்தி வீரன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இப்படம் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு கார்த்திக்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை மதுரையில் நடந்தன.இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் முடிவடைந்ததோடு படம் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து சென்னையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி தனது அண்ணன் நடிகர் சூர்யாவை இயக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார். அதில் “நான் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி முடித்தவுடன், அண்ணனுக்காக ஒரு பயோபிக் கதையை எழுதினேன். அதை படமாக்குவது என்னுடைய கனவு” எனக் கூறியுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் அப்போ கார்த்தி படத்தில் வெகு சீக்கிரமே சூர்யா நடிக்கவுள்ளாரா? எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement