• Oct 05 2024

யாருக்கும் அதை செய்ய மாட்டேன்... கொந்தளித்த வானத்தை போல சீரியல் நடிகை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனது நடிப்பின் மூலம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியவர் தான் சீரியல் நடிகை செந்தில்குமாரி.அதோடு சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவர் தனக்கென ஒரு முத்திரையைப் பிடித்து உள்ளார். இவருடைய சொந்த ஊர் மதுரை. திருமணத்திற்குப் பிறகு தான் இவர் நடிப்பு துறைக்கு வந்தார். 

இவர் சின்னத்திரையில் மட்டுமன்றி வெள்ளித்திரையிலும் ஜொலித்தவர்.அதாவது செந்தில்குமாரி 200ற்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களிலும் சில படங்களில் முக்கியமான துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.



குறிப்பாக ஐரா படத்தில் நயன்தாராவின் ஒரு கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்தார். மேலும்  இந்த படத்தை தொடர்ந்து தற்போது சாயம், கோலி சோடா 3 உள்ளிட்ட படங்களிலும், சில சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.தற்போது இவர் வானத்தை போல சீரியலிலும் நடித்து வருகின்றார்.

எனினும் இதற்கிடையில் சமீபத்திய ஒரு பேட்டியொன்றில் தனக்கு காத்திருக்க வைப்பது  சுத்தமாக பிடிக்காது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய  அவர் ” எனக்கு ஒருவரை காத்திருக்க வைப்பது பிடிக்கவே பிடிக்காது.



நான் யாரையும் காத்திருக்க வைக்கவே மாட்டேன். அந்த ஒரு விஷயத்தில் யாராவது என்னை காத்திருக்க வைத்தால் தாங்கவே முடியாது. நான் யாருக்காகவும் அதைச்செய்யவே மாட்டேன்.  என்னை பொறுத்தவரை யாரையும் காத்திருக்க வைக்க கூடாது ” என்று கூறியுள்ளார்.. இவர் பேசியதை  பார்த்த நெட்டிசன்கள்  நீங்கள் இவ்வளவு கோபப்டுவீர்களா..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement

Advertisement