• Apr 28 2024

இனி அந்த மாதிரி நடிக்க மாட்டேன்.. சமந்தாவின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த சமந்தாவுக்கு இந்தி பட வாய்ப்புகளும் வந்துள்ளன. சமந்தா நாகசைதன்யாவை திருமணம் செய்வதற்கு முன்பும், அவரை விவாகரத்து செய்து பிரிந்த பிறகும் அரைகுறை உடையில் அதிக கவர்ச்சியாக நடித்து வருகிறார். 



பேமிலிமேன் வெப் தொடரில் நெருக்கமான கவர்ச்சி காட்சியில் நடித்ததே விவாகரத்துக்கு காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் புஷ்பா படத்தில் குத்துப்பாடலிலும் சமந்தா கவர்ச்சியாக ஆடி இருந்தார். சமூக வலைத்தளத்திலும் தனது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்தார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வந்தனர்.


இவ்வாறுஇருக்கையில்  இனிமேல் புதிய படங்களில் கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சமந்தா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு சமூக வலைத்தளங்களில் இருந்தும் சற்று விலகி இருக்க சமந்தா முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.


கதாநாயகனுடன் நெருக்கமான காட்சிகள் இருக்க கூடாது, முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன், அரைகுறை உடையில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை விதிப்பதாகவும், அதற்கு சம்மதிப்பவர்களின் படங்களில் மட்டுமே நடிக்க சமந்தா கால்ஷீட் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க முன்னுரிமை கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement