• May 13 2024

எப்போதும் அதை மறக்க முடியாது சமந்தா தான் என்னோட குளோஸ்ட் பிரண்ட்- கூலாக கூறிய நாகசைத்தன்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் நாகசைத்தன்யா. இவர் தற்பொழுது தங்யூ என்னும் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ராஷி கண்ணாவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றில் பேட்டியளித்துள்ளார். அதில் தன்னைப் பற்றி சுவாரஸியமான விடயங்களைக் கூறியிருக்கின்றார்.அந்த வகையில் அதில் கூறியதாவது தாங்யூ படத்தில் நான் ஹோக்கி பிளேயராக நடித்திருக்கின்றேன்.அதற்காக மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தேன் என்றும் கூறினார்.

அத்தோடு இப்படத்தில் என்னுடன் மற்றவங்களும் சூப்பராக நடிச்சிருக்கிறாங்க . இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளேன். இப்படத்தின் ஷுட்டிங் விரைவில் ஆரம்பமாகும். இதில் யுவனுடன் இளையராஜாவும் இசையமைக்கவுள்ளார். அத்தோடு இப்படம் தமிழ் ,தெலுங்கு இரண்டு மொழியிலும் வெளியாகவுள்ளது.

நான் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும் இதனால் எனக்கு மிகவும் சந்தோசமாகவும் அதிக எதிர்பார்ப்பில் இருக்கின்றேன் என்றும் கூறினார். மேலும் என்னால் மனம் படத்தில் நடித்த அனுபவத்தைத் தான் எப்போதும் மறக்க முடியாது ஏனென்றால் அதில் என்னோட அப்பாவும் தாத்தாவும் நடிச்சிருந்தாங்க அந்த அனுபவத்தை மறக்க முடியாது என்று கூறினார்.

மேலும் எனக்கு சாய்பல்லவி மற்றும் சமந்தாவோட கெமிஸ்ட்ரி எப்பவும் நல்லா இருக்கும் என்றும் கூறினார்.அத்தோடு என்னோட நல்ல நண்பர் சமந்தா மட்டும் தான் என்றும் கூறினார்.இது தவிர இன்னும் பல சுவாரஸியமான விடயங்களை அந்த பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement