• May 04 2024

இந்த நடிகருடன் மட்டும் நடிக்கவே மாட்டேன்... பரபரப்பு காரணத்தை கூறிய சாய் பல்லவி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2015-ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான 'பிரேமம்' என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை சாய்பல்லவி. இப்படமே இவருக்கு கதாநாயகி என்ற அந்தஸ்தையும் கொடுத்திருந்தது. சாதாரண ஒருவராக இருந்த சாய் பல்லவியை தென்னிந்திய அளவில் பிரபலமாக்கியதும் இந்தப் படம் தான்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் 'தியா' என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் சாய் பல்லவி. இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமையால் தொடர்ந்து சூர்யா, தனுஷ் எனப் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் சமீபத்தில் வெளிவந்த 'கார்கி' திரைப்படமும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளதோடு வெற்றிப்படமாகவும் மாறி இருக்கின்றது. 


குறிப்பாக டோலிவுட்டில் இவர் படு பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். அங்கு இவர் நடிக்கும் படங்களெல்லாம் சக்கைபோடு போடுகின்றன. மேலும் இவரது படங்களுக்கென தனி மவுசு உள்ளது. டோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் நானி, நாக சைதன்யா, ராணா டகுபதி ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ள சாய்பல்லவி, விரைவில் ஜூனியர் என்.டி.ஆர் உடனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா உடன் மட்டும் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தோடு தான் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதைகளையும், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் சாய் பல்லவி கூறியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா பற்றி அவர் இப்படி சொல்ல மற்றுமொரு முக்கிய காரணமும் இருக்கிறதாம். அது என்னவென்றால், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் முதலில் சாய் பல்லவி தான் நாயகியாக நடிக்க இருந்தாராம். 



இதன் பின்னர் அப்படத்தில் அதிகளவில் முத்தக் காட்சிகள் இருப்பதாக கூறி அவர் விலகியதால் அவருக்கு பதில் ராஷ்மிகா நடித்தார். அதன்பின்னரே அவர் விஜய் தேவரகொண்டாவுடன் எந்த படத்திலும் நடிக்க கூடாது என முடிவெடுத்ததாக டோலிவுட் வாட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement