• May 04 2024

ஐஸ்வர்யா ராய் கிட்ட நெருங்கவே பயமாக இருந்தது பின்பு நோர்மல் ஆகிட்டேன்- கவலையில் நடிகர் சரத்குமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகமெங்கும் வாழும் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படமானது நாளை மறுதினம் வெளியாகவுள்ளதால் அனைவரும் ஆவலாக உள்ளனர்.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையாக இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார்.


இந்த நிலையில் இப்படத்தில் நந்தினி கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயுடன், காதல் காட்சிகளில் நடித்தது குறித்து, இப்படத்தில்  பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரல் நடித்த சரத்குமார் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது  “முதல் நாள் சில நெருங்கி நடிக்க வேண்டிய காட்சிகளில் தயக்கம் இருந்தது.  அவர் உலக அழகி,.. நான் காட்சிக்காக நடிக்கிறேனா என புரிதல் இல்லாமல் போகலாம். ஏனென்றால் மொழி பிரச்சனை உள்ளது. அதனால் முதலில் அப்படி இருந்தது, பின்னர் மணி சார், கமான் கமான் சரத் நடிங்க. என்று ஊக்கம் கொடுத்தார், பின்னர் இயல்பானேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இவரைப் போல விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி த்ரிஷா ஆகியோரும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களும் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement