• Apr 27 2024

யாரும் பண்ணாத விஷயத்தை நீ செய் என்றேன் இப்போ என்ன பண்றான் பாருங்க- ராபர்ட் மாஸ்டரை வறுத்தெடுத்த வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பமாகிய நாளிலிருந்து ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா சைட் அடித்து வருவதை காண முடிகின்றது.சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் கிச்சன் ஏரியாவிலேயே சுற்றி வருவதை குறிப்பிட்டு தனலட்சுமி சில கருத்துக்களை பேசி இருந்தார்.இதனால் மாஸ்டர் கோபத்தில் இருந்தார்.

ஒரு கட்டத்தில் கடுப்பான ரச்சிதா ராபர்ட் மாஸ்டரிடம் சென்று  "ஏன் இப்படி அப்நார்மலாக நடந்து கொள்கிறீர்கள்?. நார்மலாக இருங்களேன். நீங்க என்ன எவ்வளவு கலாய்க்குறீங்க, பதிலுக்கு நான் ஒன்னும் சொல்ல கூடாதா?. ஏன் இப்படி இருக்கீங்க. நீங்க பண்றது குழந்தைத்தனமா இருக்கு. உங்களுக்கு அது தெரியுதா?. எதோ எதிரி மாதிரி Behave பண்றீங்க. எதிர்ல இருக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?. நீங்க நார்மலா இருங்க" என சொல்லிவிட்டார்.


இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதா இது குறித்து பேசியுள்ளார். அதாவது “ராபர்ட் ரச்சிதா விஷயம்.. என்ன நடக்குதுனே எனக்கு புரியவில்லை. என்னதான் நடக்குது. ராபர்ட் உள்ளே செல்லும்போது நான் சொல்லித்தான் அனுப்பினேன். இங்கு சென்றாலே காதல் அது இது என்று வரும்.. அப்படி வந்தால் முதல் ஆளாக இதுவரை பிக் பாஸில் யாரும் பண்ணாத விஷயத்தை நீ செய்..என்றேன், அதற்கு‘போதும்மா சாமி.. இந்த லவ்வே வேண்டாம்.. இங்கு கேம் விளையாட வந்தோம்.. அந்த வேலையை செய்வோம் என்று சொல்லி அட்வைஸ் பண்ணிவிட்டு நீ நடந்து சென்றால்  ஹீரோ’ என்று கூறினேன். அப்போது ராபர்ட் அப்படி எல்லாம்  நடக்குமா? என்று கூறினான்.



அதற்கு நானும், “நீ பண்ண மாட்டேப்பா .. ஆனால் யாராவது அப்படி பேசினால் கூட நீ இப்படி சொல் என்று கூறி அனுப்பி இருந்தேன். ஆனால் கடைசில இவன் என்ன பண்ணுகிறான் என்பது அவனுக்கே தெரிகிறதா என்பது தெரியவில்லை.” என்றார். அப்போது பேசிய ஷகிலா, “இதுக்கு நடுவுல 22 வயசு பையன் என்கிறார்” என்று எடுத்துச் சொல்ல, “ஆமாம் 22 வயசு பொண்ணு என்கிறார்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்று வனிதா சிரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement