• Apr 25 2024

எங்களை எல்லாம் பார்த்தால் உனக்கு எப்பிடிடா தெரியுது... கதிரவனிடம் எகிறிய ஆயிஷா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது ஏழாவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. நாட்கள் எந்தளவுக்கு நீண்டு கொண்டு போகின்றதோ அந்தளவுக்கு போட்டியாளர்களுக்கு இடையிலான சண்டையும் நீண்ட வண்ணம் தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது கலகலப்பு, சிரிப்பு என்பற்றுக்கும் என்றைக்குமே குறைவு இருப்பதில்லை. 

அதுமட்டுமல்லாது ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற போகிறார்கள். எந்த போட்டியாளர் யாரை நாமினேஷன் செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

ஏனெனில் நாமினேஷன் ரவுண்டில் தான் போட்டியாளர்களின் இன்னொரு முகம் தெரியும். அத்தோடு இவர்களுக்கு இடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் குயின்ஷி, ஆயிஷா ஆகியோர் கதிரவனைக் கலாய்க்கின்றனர். அதாவது அவர் கையில் அணிந்திருந்த மோதிரத்தைப் பறித்து தனது கையில் அணிந்து கொள்கின்றார் குயின்ஷி. அதனை தன்னிடமே கொடுக்கும்படி கெஞ்சுகின்றார் கதிரவன். 


இதனைத் தொடர்ந்து ஆயிஷா "இதோ யாரோட றிங், யாரையாவது லவ் பண்றியா சொல்லு" எனக் கேட்கின்றார். அதற்கு கதிரவன் அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுவன் தானே எனக் கூறுகின்றார். அதற்கு உடனே ஆயிஷா "இது சாதா றிங் தானே அப்போ எங்களுக்கு தர மாட்டீங்களா" எனக் கேட்கின்றார். 

அந்த றிங்கில் இருக்கும் T யாரோட எனவும் கேட்கின்றார்கள். அதற்கு கதிரவன் உடனே அது காரோட நேம் எனக் கூறி சமாளிக்கின்றார். உடனே ஆயிஷா "எங்களை எல்லாம் பார்த்தால் உனக்கு எப்படிடா தெரியுது" எனக் கிண்டலாக கேட்டு எகிறுகின்றார்.


அதுமட்டுமல்லாது கதிரவனின் றிங்கை குயின்ஷி தனது கையில் அணிந்து இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆயிஷா மற்றும் குயின்ஷி இருவருக்கும் கதிரவன் மேல் லவ் வந்து விட்டதாகவும், இருவருமே கதிரவனை வளைச்சுப் போடப் பார்ப்பதாகவும் கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement