• May 18 2024

12பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்... ஸ்ரீதேவி இப்படியானவர் தான்... தனது சொந்தத் தங்கை குறித்த நீண்டநாள் ரகசியத்தை போட்டுடைத்த வனிதா..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் ஒருவராக பல காலமாகத் திகழ்ந்து வருகின்ற ஒருவரே நடிகர் விஜயகுமார். இவர் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார். அன்று தொடக்கம் இன்றுவரை சினிமாத் துறையிலேயே தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.


இவ்வாறாக மூத்த நடிகராக இருக்கின்ற விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரு மனைவிகள். அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா, அருண் என 3 பிள்ளைகளும், இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்களும் என விஜயகுமாருக்கு மொத்தமாக 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 


இந்த 5 மகள்களிலும் வனிதாவுடன் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக குடும்பத்தினர் யாருமே அவருடன் கதைப்பதில்லை. இவர் தவிர்ந்த ஏனைய நான்கு மகள்களும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதா பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அந்தவகையில் அவர் கூறுகையில் "என் இரு மகள்கள் மற்றும் மகன் ஸ்ரீஹரி கட்டாயமாக சினிமாவுக்கு தான் வருவார்கள், அவர்கள் காதலித்தாலும் நான் காதலை பிரித்துவிடுவேன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்" என வனிதா தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், தான் இதுவரை 12 பேருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். அத்தோடு காதலர் தினத்தற்கு ஐ லவ் யூ என எழுதியிருந்த க்ரீடிங் கார்ட் அம்மாவுக்கு கொடுத்ததாகவும், ஆனால் அது அம்மாவுக்கு வாங்கவில்லை. தான் ன் காதலித்த ஒருவருக்காக வாங்கியதாகவும், அதனை அம்மா பார்த்தபடியால் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அம்மாவுக்காக வாங்கியது என்று சொல்லி பொய் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய தங்கைகள் பற்றிக் கூறுகையில் தன்னுடைய அம்மா தன்னையும் , தன் தங்கை ப்ரீத்தாவையும் மட்டுமே அடித்து வளர்த்தார் எனவும், 2வது தங்கை ஸ்ரீதேவியை எப்பவும் அவர்கள் அடித்தது இல்லை எனவும் கூறியுள்ளார்.


ஸ்ரீதேவியை அவர்கள் அடிக்காமைக்கான காரணம், சின்ன வயதில் ஸ்ரீதேவி மிகவும் கோபப்படுவார். கோபம் வந்தால் ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு கையில் கிடைப்பதை எல்லாம் போட்டு உடைப்பாள். இதே மாதிரிதான் சிறு வயதில் இருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்ல டிராமா போட்டு எல்லாரையும் பயங்கரமாக ஏமாற்றுவார். அதனாலேயே அவளை யாருமே அடிக்க மாட்டார்கள்" எனவும் கூறி ஸ்ரீதேவி பற்றிய நீண்டநாள் ரகசியத்தை அந்தப் பேட்டியில் போட்டுடைத்துள்ளார் வனிதா

Advertisement

Advertisement