• May 10 2024

“சுத்தமாக பிடிக்கவில்லை”...ஜீ தமிழுக்கு சென்றதும் விஜய் டிவி நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த சாரா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி நிகழ்ச்சி பற்றி அர்ச்சனாவின் மகள் சாரா கூறிய விடயம் ரசிகர்களிடத்தே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

90காலகட்டத்தில் இருந்து தனக்கான இடத்தை பிடித்து முக்கிய தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் அர்ச்சனா.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .திருமணத்திற்குப் பின்னர் தொலைக்காட்சியிலிருந்து விலகினார்.இது ரசிகர்களிடத்தே பெரும் இடைவெளியை கொடுத்திருநி்தது.இதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

மேலும், அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர். என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்து இவர்களை ரோல் பண்ணிகார்கள்.



அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் உருவாகினர். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் சாரா கூறியதை கேட்டு பலரும் எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்தார்கள்.

இருப்பினும் இவர்களுக்கு சமூக வலைதளத்தில் ஹேட்டர்ஸ்கள் குறைந்தபாடில்லை. இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா மற்றும் சாரா இருவரும் விஜய் டிவியில் ‘தாயில்லாமல் நான் இல்லை’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக வந்ததை பார்த்து ஹேட்டர்ஸ்கள் திட்டி தீர்த்தனர். 

எனினும் இறுதியாக விஜய் டிவியில் இருந்த அர்ச்சனா மற்றும் சாரா தற்போது மீண்டும் ஜீ தமிழ் சேனலுக்கே திரும்பி உள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் சாரா தொகுப்பாளர்களாக  மறுபடியும் களமிற்ஙகி உள்ளார்கள்.



இப்படி ஒரு நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் மோசம் என்றும் தனது தாயார் அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் தன்னுடைய அம்மாவின் கேரக்டரை முழுமையாக காட்டாமல் நெகட்டிவ் விஷயங்களை மட்டும் காட்டி அவருடைய பெயரை கெடுத்து விட்டதாகவும்  தெரிவிதத்துள்ளார். விஜய் டிவியில் இருந்து அர்ச்சனா வெளியேறிய நிலையில் அர்ச்சனாவின் மகள் சாரா இப்படி பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement