• May 03 2024

கஜினி படத்தின் கதை எனக்கு பிடிக்கல- சூர்யாவிடம் நேராகவே சொன்ன பிரபல நடிகர்

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களி் ஒருவராக இருப்பவர் தான் சூர்யா.இவர் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார்.அதனைத் தொடர்ந்து  ஆயுத எழுத்து, கஜினி, சிங்கம், பேரழகன், வேல், ஏழாம் அறிவு, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து, டாப் ஹீரோக்களில் ஒருவரானார்.

இப்போது, அவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகின்றது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படமானது பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது.சூர்யா சினிமா வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் கஜினி. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நடந்ததை மறந்துவிடும் நிலையில், தனது காதலியை (அசின்) கொன்றவர்களை பழிவாங்கும் ஒரு கேரக்டரில், சஞ்சய் ராமசாமியாக சூர்யா வாழ்ந்து இருந்தார். 


. ஏஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படம், செம ஹிட் ஆனது. அதன்பின்பே, சூர்யா பெரிய நடிகர்களில் வரிசையில் இடம்பிடித்தார்.இந்நிலையில், சமீபத்தில் மாதவன், சூர்யா இருவரும் வீடியோகாலில் பேசிக்கொள்ளும் ஒரு கிளிப்பிங் வெளியாகி இருக்கிறது. இதில், மாதவன் சூர்யாவிடம் பேச, அதை சிரித்தபடி, ஆமோதித்தபடி சூர்யா கேட்டுக்கொண்டு சிரிக்கிறார்.

அதில் மாதவன் பேசுகையில், நான் ஒரு காலத்தில் ஜாலியா இருந்தேன். நேருக்கு நேர் படம் பண்ணும்போது, உங்களுக்கு நிறைய அட்வைஸ் பண்ணி இருக்கேன். இப்படி இருக்கணும், அப்படி செய்யணுமுன்னு நிறைய சொல்லி இருக்கேன். அப்புறம், நாம ரெண்டு பேரும் மணிரத்னம் சார் கிட்ட ஒர்க் பண்ணினோம். அப்போ, நமக்குள்ள நிறைய பழக ஆரம்பிச்சோம்.அப்பவெல்லாம், நிறைய படங்கள் நல்லா ஓடீட்டு இருந்துச்சு.நல்லா படங்கள் ஓடுறது சந்தோஷமா, ஜாலியா இருந்துச்சு.


ரன், அன்பே சிவம் படங்களில் நடிச்சப்போ பேரும், புகழும் கிடைச்சுது. சந்தோஷமா இருந்துச்சு. அப்போ, கஜினின்னு ஒரு படம் எனக்கு ஆபர் பண்ணுனாங்க.அந்த கதை எனக்கு புடிக்காம போயி, முருகதாஸ் கிட்ட சார் இந்த கதையில நடிக்க எனக்கு உடன்பாடு இல்லேன்னு சொல்லிட்டேன். அப்புறம் அங்க இங்க சுத்தி, கடைசியா அது உங்க கைக்கு வந்துடுச்சு.காக்க காக்க படத்துல உங்களை நான் பார்த்திருந்தேன். அதனால, கரெக்டான ஆள்கிட்ட கஜினி போயிருக்குன்னு நான் நினைச்சேன். அதை நீங்க ப்ரூப் பண்ணிட்டீங்க. ஐ யம் சோ ஹேப்பி என்று மாதவன், சூர்யாவை பாராட்டி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement