• May 04 2024

''டீ குடிக்க கூட என்கிட்ட கைல காசு கிடையாது''...நடிகர் சமுத்திரக்கனி இப்படியெல்லாம் கஸ்டப்பட்டாரா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சசிகுமார் நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அயோத்தி'. பெரிதளவு ப்ரொமோஷன் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் மூலம் பலரது கவனத்தை பெற்றது. 

விமர்சகர்கள் உள்பட பலராலும் பாராட்டை பெற்றது. இப்படத்தின் 50வது நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது. இவ்விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இவ்விழாவில் பேசிய சமுத்திரக்கனி பேசியதாவது; - "சமீபமாக நானும் சசியும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடிவதில்லை. எப்படியும் பார்த்துவிடுவோம். அப்போது நாங்கள் செய்யும் படங்கள் பற்றி பேசிக்கொள்வோம். அப்போதே இந்தப் படம் பற்றி மிக நம்பிக்கையோடு சொன்னார். ஒரு படம் 10 வருடம் 20 வருடம் கடந்தும் பேசப்படும். இந்தப் படம் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படும். இந்தப் படம் பற்றி தெலுங்கில் என்னிடம் கேட்டார்கள். இப்படி ஒரு படம் வந்திருக்கிறது. நீங்கள் பாருங்கள். தெலுங்கில் நீங்கள் செய்ய முடியுமா? அது என் தம்பி படம். என் சகோதரர் தான் தயாரிப்பாளர் என பெருமையோடு சொன்னேன்.இந்தப் படம் மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது.

சசி நிஜ வாழ்க்கையிலேயே எல்லோருக்கும் ஓடி உதவும் மனிதன். யாஷ்பால் சர்மா, ப்ரீத்தி நடிப்பு அற்புதம். இன்னும் இந்தப் படம் ஓடும். அனைவருக்கும் என் வாழ்த்துகள்" என்றார்.  

மேலும் ,அவர் பேசியதாவது-நண்பன் ரகு ,நான் அசிஸ்ரண்ட் டைரக்டரா இருந்த காலத்தில் தெரு தெருவா சுத்திட்டு வருவோம் .ஒரு டீ கடையில் இருவரும் மீட் பண்ணுவோம்.ரெண்டு பேருக்குமே டீ குடிக்க காசு இருக்காது .ஒரு டீ -யை வாங்கி பாதி பாதியா குடிச்சிட்டு அவர் அந்த பக்கம்,நான் இந்த பக்கம்ன்னு கிளம்பிடுவோம்.இப்படி இருந்த மனிதன் இப்போ இந்த நிலைமையில் இருக்காரு என்று நினைக்கும் பொது மிகவும் சந்தோஷமாக இருக்குது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement