• May 04 2024

நடிகை ரேவதி என்ற பெயர் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை- எதனால் அந்த பெயர் வந்திச்சு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரேவதி. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கை கொடுக்கும் கை, புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தால், உன்னை நான் சந்தித்தேன், போன்ற பல படங்களில் நடித்தார்.

தனது இயல்பான நடிப்பினாலும் துறுதுறுவான பேச்சாலும் ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, உதய கீதம், பகல் நிலவு, ஆகாயத் தாமரை, என இன்னும் பல திரைப்படங்களில் நடித்தார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் திரைப்படம் தான் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

மேலும் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்க முக்கியத்துவம் உள்ள குணச்சித்திரவேடங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவர் சினிமாவில் நடிக்க துவங்கிய பிறகு தனக்கு ஏற்பட்ட மாற்றங்களை பற்றி மனம் விட்டு கூறியுள்ளார். அதாவது இவரின் உண்மையான பெயர் ஆஷா. ஆஷா எப்படி ரேவதியாக மாறினார். இந்த பெயர் பற்றிய ரகசியத்தையும் கூறியுள்ளார் ரேவதி.

தனக்கு ரேவதி என்ற பெயர் வைத்தது சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், எனக்கு எங்க அம்மா அப்பா வைத்த பெயர் ஆஷா. அதை ஏன் மாத்துறீங்க என்று கேட்டுள்ளார். பெயர் மாற்றிய சில மாதங்களுக்கு ரேவதி என்று கூப்பிட்டால், நான் திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்றும், எனக்கு பெயர் பிடிக்காமல் மிகவும் அழுததாகவும், தனக்கு அந்த பெயர் சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே சினிமா துறையில் ஆஷா என்ற பெயரில் பலர் உள்ளனர். அதனால் தமிழ் திரையுலகில் ஆஷா என்ற பெயர் எடுபடாது. அதனால் பெயர் மாற்றிக் கொள்ளும் படி வற்புறுத்தினார்கள். என் பெயர் மாற்றப்பட்டது குறித்து பேப்பரில் எல்லாம் வந்தது. எனக்கும் ரேவதிக்கும் சம்பந்தம் கிடையாது என்று மிகவும் அடம் பிடித்ததாகவும், சில நாட்களுக்கு பிறகு தனக்கு அந்த பெயர் பிடித்து போனதாகவும், ஃபேமிலி நண்பர்கள் மதியில் ஆஷா என்று தான் இன்றும் அழைப்பார்கள் என்றும், வெளியுலகத்திற்கும் சினிமாவிற்கும் மட்டும் தான் நான் ரேவதி என்றும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement