• May 05 2024

நான் நிர்வாணமாக போட்டோ எடுக்கவில்லை அது மார்பிங் செய்யப்பட்டுள்ளது- அதிர்ச்சித் தகவலைக் கூறிய ரன்வீர் சிங்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தனது புகைப்படம் நிர்வாணமாக இருப்பது போல் மார்பிங் செய்யபட்டுள்ளதாக ரன்வீர் சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் ரன்வீர் சிங், இவர் கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த அவரது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 


இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் மீது தன்னார்வ அமைப்பு சார்பில் மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், ரன்வீர் சிங் நிர்வாண படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது.

 இந்த புகார் குறித்து போலீசார் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியான விவகாரத்தில் தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.


அத்தோடு நான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. அது மார்பிங் செய்யபட்டுள்ளதாக ரன்வீர் சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த புகைப்படத்தை தடவியல் ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் ரசிகர்களும் கடும் குழப்பத்தில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement