• May 18 2024

நடிகர் ரஜனியை நான் சரியாக கவனிக்கவில்லை... வருத்தத்தில் பிரபல இயக்குனர் கருத்து...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வலம் வருகின்றார் நடிகர் ரஜனிகாந்த். நான் ரஜினியை சரியாக கவனிக்கவில்லை என்று முன்னணி இயக்குனர் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.


நடிகர் ரஜனியின் மீது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தார் ரஜினி. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் 700 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படம் அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படம் என அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருக்கின்றார். இந்நிலையில் இன்று இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார் ரஜினி. 


பல கஷ்ட்டங்கள்,பல அவமானங்கள், போராட்டங்கள் என தன் ஆரம்பகாலகட்டத்தை கழித்துள்ளார் ரஜினி. இதைப்பற்றி ரஜினியே பலமுறை பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் பேசியுள்ளார். இந்நிலையில் ரஜினிக்கு ஆரம்பகாலகட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்த திரைப்படம் தான் பதினாறு வயதினிலே. பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினி ஆகியோர் நடித்த இப்படம் 1978 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் புது ட்ரெண்டை உருவாக்கியது.

இப்படத்தில் நடிக்கும்போது கமல்ஹாசன் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துள்ளார். ஆனால் ரஜினி அப்போது வளர்ந்து வரும் நடிகர் தான். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை பற்றி பேசிய பாரதிராஜா ரஜினியை நான் சரியாக கவனிக்கவில்லை என பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பதினாறு வயதினிலே படத்தில் நடிக்கும்போது கமலுக்கு 35 ஆயிரம் சம்பளம், ஆனால் ரஜினிக்கு 5000 தான் சம்பளம். 


கமல் மற்றும் ஸ்ரீதேவிக்கு கவனிப்பு பலமாக இருந்தது. சாப்பாடு முதல் தங்கும் இடம் வரை அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன். ஆனால் ரஜினியை நான் கவனிக்கவே இல்லை. அவர் எங்கே தங்கினார், எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தார் என்பதை பற்றியெல்லாம் நான் கவனிக்கவில்லை.

இருந்தாலும் ரஜினி முழு அர்ப்பணிப்புடன் பதினாறு வயதினிலே படத்தில் நடித்தார் என்றார் பாரதிராஜா. ஆனால் ரஜினி இதைப்பற்றி எல்லாம் கண்டுக்கவில்லை. தன் வேலையில் மட்டுமே தான் கவனமாக இருக்கின்றார். அதனால் தான் ரஜினி இன்று இந்த நிலையை அடைந்துள்ளார் என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement