• May 02 2024

இரண்டு நாள் எப்பிஷோட்டை பார்த்து அழுதிட்டேன் இப்போ தான் சரியா பேசியிருக்கிறீங்க- பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு ரசிகர்களால் குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்பிறகு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்பொழுது விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அனைவரும் வேலைக்கு போகின்றார்கள் என்பதால் ஜீவா மட்டும் சொந்தமாக சம்பாதிக்க முடியாததால் வீட்டில் ஒதுக்கப்படுவதாகக் கருதியதோடு மூர்த்தியிடம் முதன்முறையாக தனது மனதில் இருக்கும் விடயங்களை கூறுகின்றார்.அத்தோடு இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன் என்றும் கூறி விட்டார். 


இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்து விட்டது. இதனை அடுத்து வீட்டிற்கு வந்ததும் கண்ணனை தனம் திட்டுவதைப் பார்த்த ஐஸ்வர்யா அனைவர் மீதும் கடும் கோபத்தில் இருக்கின்றார். அத்தோடு ஐஸ்வர்யாவும் கண்ணனும் அடுத்ததாக வீட்டைட விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படியான நிலையில் கடந்த இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகிய எப்பிஷோட்களில் ஜீவா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.அதிலும் ஒரு ரசிகர் கூறியிருப்பதாவது, கடந்த இரண்டு நாளாக உங்கட எப்பிஷோட்டை பார்த்து அழுதிட்டேன். நீங்க சூப்பராக உணர்ச்சி வசமாக நடித்திருந்தீங்க. உங்கட கேள்விகள் வார்த்தைகள் எல்லாம் உண்மையாக இருந்திச்சு. இப்போ தான் நீங்க முதல் முறையாக மனைவிக்கு சர்ப்போட் பண்ணி பேசியிருக்கிறீங்க என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனை வெங்கட் தன்னுடைய இன்ஸடாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement