• May 04 2024

விஜய் ஓடுற மாதிரி எல்லாம் என்னால நடுரோட்டில் ஓட முடியாது- முக்கிய படத்தில் நடிகர் நாகர்ஜீனா செய்த காரியம்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கமர்சியல் நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவரது நடிப்பில் தற்பொழுது லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.இதனை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அப்படி அவர் நடித்த படங்களில் முக்கியமான படம் துள்ளாத மனமும் துள்ளும். இயக்குநர் எழில் இயக்கத்தில் 199ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது.முக்கியமாக விஜய்யின் கேரியரில் தி பெஸ்ட் படங்கள் என்ற லிஸ்ட்டை எடுத்தால் அதில் துள்ளாத மனமும் துள்ளும் முக்கிய இடம் பெறுகின்றது.


துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் வடிவேலுதான் ஹீரோவாக நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட விஜய் உள்ளே வந்தார். குட்டி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவருக்கு அந்தப் படம் நன்றாகவே தீனி போட்டது. சாந்தமான நடிப்பு, அளவான அழகு, கேஷுவல் லுக் என விஜய் வேறு பரிணாமத்தில் தோன்றி அசத்தியிருந்தார். 

குறிப்பாக தனது தாய் இறந்ததை யாருக்கும் தெரியாமல் தன்னுள் புதைத்து அழுதது, க்ளைமேக்ஸில் காவல் துறையிடம் அடி வாங்கி கலங்கி நிற்பது எல்லாம் ரசிகர்களைக் கவர்ந்தது. இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனது இதில் கதாநாயகனாக நாகர்ஜுனா நடித்திருந்தார். ஷூட்டிங் சுமூகமாக போய்க்கொண்டிருந்தபோது ஒருநாள் சென்னையில் இருந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஃபோன் வந்திருக்கிறது. 

அப்போது, படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நாகர்ஜுனா நடிக்க மறுப்பதாக கூறியிருக்கிறார்கள்.உடனே விமானத்தை பிடித்து ஷூட்டிங் ஸ்பாட் சென்ற ஆர்.பி.சௌத்ரி என்ன விஷயம் என நாகர்ஜுனாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, ஒரு கலெக்டர் சாலையில் ஓடிவருவதை தெலுங்கு மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே நான் இதில் நடிக்கமாட்டேன் என கூறியிருக்கிறார்.

 ஆனால் ஆர்.பி.சௌத்ரியோ இல்லை இதில் நடி. அப்படி இந்த சீனுக்கு ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை என்றால் ஏற்கனவே பேசியதைவிட பத்து மடங்கு சம்பளம் தருகிறேன் என கூறியிருக்கிறார். இதனையடுத்து வேண்டா வெறுப்பாக நாகார்ஜுனா அந்த சீனில் நடித்து படமும் வெளியாகிவிட்டது.


 ரிலீஸுக்கு பிறகு நகரியில் இருக்கும் ஒரு திரையரங்கில் நாகர்ஜுனா படம் பார்த்திருக்கிறார். அப்போது சௌத்ரி சொன்னபடியே க்ளைமேக்ஸ் சீன் வரும்போது ரசிகர்கள் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கின்றனர். அதுவும் எழுந்து நின்று கைதட்டியிருக்கின்றனர். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement