• May 04 2024

நானும் பெண்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தேன்.. ஆனால் அதற்குப் பணம் கொடுத்தேன்.. பயில்வான் பகீர் பேட்டி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் காமெடி கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது யூடியூப் பிரபலமாக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற 'கட்சிக்காரன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதனுக்கும் தயாரிப்பாளர் கே ராஜனுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து ஒருவரையொருவர் ஒருமையில் பேசிக் கொண்டதோடு, பயில்வான் ரங்கநாதன் பேசிய சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன.

அந்தவகையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் கட்சிக்காரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ராஜன் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டிருந்தார். 


அப்போது அந்நிகழ்வில் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டபோது, "இதில் வியர்வையை கூட துடைக்க முடியாதப்பா. இதற்கு பதிலாக காதி கிராஃப்ட்டில் சால்வை வாங்கியிருக்கலாம். இந்தியாவும் இப்போது வல்லரசு ஆகிவிட்டதால் எதற்கெடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டியிருக்கு" என நக்கலாகப் பேசியிருந்தார்.


அந்த சமயத்தில் ஜிஎஸ்டி குறித்து பயில்வான் ரங்கநாதன் பேச, அவருக்கும் மேடையில் இருந்த கே ராஜனுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஒருகட்டத்தில் இருவருமே ஒருமையில் பேசிக்கொள்ள, பயில்வான் ரங்கநாதனை பார்த்து போடா மாமா பயலே என்றார் கே ராஜன். மேலும், எப்போதும் பெண்களையும் பெட்ரூம் பற்றியுமே பேசும் நீ எச்சப் பயல் என கடுமையாக சாடினார். 


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பயில்வான் ரங்கநாதன், கே ராஜன் குறித்து பகிரங்கமாக சில கருத்துகளை முன்வைத்தார். அந்தவகையில் "தயாரிப்பாளர் ராஜன் தான் என்னிடம் வம்பிழுத்தார். நான் தவறாக பேசியிருந்தால் அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். அது இல்லாமல் என் பெயரை இழுத்தால், பப்ளிசிட்டி கிடைக்கும் என அவர் அடிக்கடி என்னிடம் பிரச்சினை செய்கிறார். 

இவர் நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசவில்லையா? பெண்களைப் பற்றி பேசியது கிடையாதா? அவரை விடவா நான் மோசமா போய்விட்டேன்? எனக் கூறினார். மேலும், எப்போ பார்த்தாலும் பேசுவதெல்லாம், 'நஷ்டம் நஷ்டம் நஷ்டம்...' தான். ஏன், லவ் டுடே படம் இவருக்கு லாபம் இல்லையா? ஜிஎஸ்டி பற்றி தாறுமாறாக அரசியல் பேசுகிறார். ஒருவேளை அந்த படத்திற்கு விருது கொடுக்குறாங்கனு வெச்சுக்கோங்க, இந்தப் பேச்சு விருதுக்கு தடையா இருக்குமா இல்லையா? எனவும் பயங்கரமாக கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து கோபத்தில் பேசிய பயில்வான் ரங்கநாதன், எதற்கெடுத்தாலும் "நான் வண்ணாரப்பேட்டை வண்ணாரப்பேட்டை" என்று ராஜன் கூறுகிறார். 'ஏப்பா... நீ வண்ணாரப்பேட்டை என்றால், என் பின்னாடி தமிழ்நாடே நிற்கும்', பாக்குறீயா! என சவாலும் விட்டிருக்கின்றார்.

மேலும், டிவி, யூடியூப்பில் அவருடன் விவாதிக்க சம்மதமா என்று என்னை அழைத்தார்கள். நான் ரெடி, அவரை வரச்சொல்லுங்க. நான் இல்லாத போது என்னை பற்றி பேசுவது; நான் வருவதாக இருந்தால் அங்கிருந்து வெளிநடப்பு செய்வது என ஒழிந்து இருக்கிறார். நான் உன் குடும்பத்தை கெடுத்தேனா, இல்லை, உன் குடும்பத்தோடு நீ வாழாமல் இருக்க நான் காரணமாக இருந்தேனா? எனவும் கோபத்தில் கொந்தளித்துப் பேசினார். 

அதேபோல், அந்த ஆளு தான், நானும் பெண்களிடம் உறவாடியிருக்கிறேன், ஆனால், அதற்கு பணம் கொடுத்திருக்கிறேன் என்று அவரே யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பலமுறை கூறியிருந்தார் எனவும் பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். மேலும், "நான் யூடியூப்பில் பேசுகிறேன் என்றால், லட்சக்கணக்கானோர் பாக்குறாங்க, ரசிக்கிறாங்க. இத்தனைக்கும் நான் சொந்த யூடியூப் நடத்தவே இல்லை. வேண்டுமென்றை அவரது பப்ளிசிட்டிக்கு என்னை இழுத்தால் நான் சும்மா விடுவேனா?" எனக் கூறியிருக்கின்றார்.

அத்தோடு கட்சிக்காரன் படத்திற்கு ஜிஎஸ்டி.,க்கும் என்ன சம்மந்தம். மேடை நாகரீகத்தை எப்போது கடைபிடித்தான் அந்த ஆளு. நான் இல்லாத போது பேசுகிறார், நான் இப்போ வந்திருக்கிறேன் இப்போ பேசு என முன்னாடி வந்து நின்றேன் அதுதான் நடந்தது.

நான் ஆதித்தனாரால் வளர்க்கப்பட்டவன். 45 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர், சோமன் பாபு வரை எல்லாரிடமும் இருந்திருக்கிறேன். அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை" எனக் கூறினார். பயில்வான் ரங்கநாதன் கோபத்தில் கத்திய இந்தப் பேட்டியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement