• Sep 17 2024

கொலை மிரட்டல் விடுத்த கணவர்-சீரியல் நடிகை பரபரப்பு புகார்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. இவர், குரு சிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல படங்களில் நடித்து மக்களிடத்தே அதிகம் பரீட்சயமானவர்.. பாலாஜி என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் இவர் திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது கணவர் மீது சைத்ரா புகார் அளித்துள்ளது புரமு் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, தன் கணவர், மாமனார் மீது புகார் அளித்துள்ளார். மேலும் அதில், தனக்கு தெரியாமலேயே வங்கி கணக்கின் மூலம் தனது கையெழுத்தை போலியாக போட்டு, தங்க நகை கடன் வாங்கியுள்ளனர்.

எனினும் இதற்கு வங்கி கிளை மேலாளரும் உடந்தையாக உள்ளார். இது பற்றி கேட்ட போது, கணவரும், மாமனாரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார் சைத்ரா. மேலும் இந்த புகார் தொடர்பாக நடிகை சைத்ராவின் கணவர் பாலாஜி, மாமனார் பொத்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே தன்னை அடித்ததாகவும், சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தை பறித்து கொண்டதாகவும் கணவர் பாலாஜி மீது கடந்த ஆம் 2018 ஆண்டு சைத்ரா, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். எனினும் அப்போது இரு வீட்டினரும் அவரை சமாதானம் செய்து, புகாரை வாபஸ் பெற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் தனது கணவர் மற்றும் மாமானார் மீது சைத்ரா புகார் அளித்துள்ளது விசயம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement