• May 04 2024

சோஹைல் முதல் மனைவியைப் பிரியக் காரணம் ஹன்ஷிகா தானா..? கண்ணீருடன் வெளிவந்த பதில் இதோ.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பெண் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து டாப் நாயகியாகத் திகழ்ந்து வருகின்றார். 


மேலும் உடல் எடை அதிகரித்தமையினால் சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். இவ்வாறு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து வரிசையாக பல படங்களில் நடித்துவரும் ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். 


அதாவது அவரின் நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கத்தூரியா என்பவரை தான் ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்தாகிவிட்டது. அதாவது கடந்த 6 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்று இருக்கிறது. சோஹைல் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ரிங்கி, இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பது நமக்குத் தெரியும். 


மேலும் சோஹைல் கத்தூரியா மற்றும் ரிங்கியின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் அவரின் தோழியான ஹன்சிகாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது. ஆனால், பின்னர் ரிங்கியுடன் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக சோஹைல் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

இதனைத் தொடந்து இளம் வயதில் ஹன்சிகா ஏன் விவகாரத்தான ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என்று பல ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. மேலும் ஹன்சிகா தனது நெருங்கிய தோழியின் கணவரை “திருடினார்” என்றும் கடுமையாக கேலி செய்யப்பட்டார்.


இந்த கேலிகள், கிண்டல்கள் குறித்து விளக்கமளிக்காமல் ஹன்சிகாவும் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக அதுகுறித்து ஹன்ஷிகா மனம்விட்டு பேசி உள்ளார். அந்தவகையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் நேற்றைய தினம் வெளியாகி இருக்கிறது. மேலும் சமீபத்தில் வெளியான அதற்கான டீசரில், ஹன்சிகா தனது அம்மாவிடம் மனம் விட்டுப் பேசும்போது "நீ தான் எனக்கு அடிக்கடி பேசும்போது, இருக்கிறாய். யாருடைய கடந்த காலத்தை பற்றியும் பார்க்கக் கூடாது என்று, உனக்கு ஓகே என்றால் எனக்கு அது போதும்" என்று கண்கலங்கியபடி ஹன்சிகா பேசியுள்ளார். 


அதுமட்டுமல்லாமல் சோஹைல் கத்தூரியாவின் கடந்த காலத்தை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பதை இதன் மூலமாக ஓப்பனாக சொல்லி இருக்கிறார் ஹன்சிகா. அதாவது "ஒரு பொது நபராக, ஒருவரை விரல்களை சுட்டிக்காட்டுவது மற்றும் ஒருவரை மோசமாக உணர வைப்பது மிகவும் எளிதானது. அதற்கான விலையை இப்போது நான் கொடுக்கிறேன். சோஹைல் அவரது மனைவியை பிரிய இப்போது நான் தான் காரணம் என்று சொல்வது முற்றிலும் ஆதாரமற்ற ஒன்று" எனக் கூறி இருக்கின்றார்.

மேலும் இதுகுறித்து சோஹைல் கத்தூரியா கூறுகையில் "நான் 2014 இல் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால் எங்கள் திருமண வாழ்க்கை குறைவாக இருந்தது. நாங்கள் இப்போது நண்பர்கள் மட்டுமே" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஹன்ஷிகா தனது தோழியின் வாழ்க்கையைத் தான் திருடவில்லை என்பது போல் கண் கலங்கியபடி கூறிய விடயமானது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement