• May 07 2024

தமிழக மக்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் 5 முக்கிய சீரியல்கள் - என்னென்ன தெரியுமா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தினம் தோறும், இல்லத்தரசிகளை கவரும் விதத்தில், ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வரும், சீரியல்களில்... தமிழக ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வரும் 5 சீரியல்கள் குறித்த தகவல் TRP தரவரிசை அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது.அதனை இங்கு தொகுத்து பார்ப்போம்.

கயல்

கயல் சீரியல் தான் அர்பன் மற்றும் ரூரல் ஏரியாக்களில் அதிகம் பார்க்கப்படும் தொடராக உள்ளது. 11.71 புள்ளிகளுடன் TRP-யில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள இந்த தொடரில் தற்போது கயல், எழிலின் காதலை ஏற்றுக்கொண்டு... அவரை திருமணம் செய்து கொள்வாரா? என ரசிகர்கள் மிகவும்  ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் சீரியல், 11.24 TRP புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஆதிரையின் திருமண எபிசோடு இதுவரை எந்த சீரியலும் பெற்றிராத அதிக TRP-யை கைப்பற்றி சாதனை செய்த நிலையில், தற்போது ஆதி குணசேகரன், அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை இழந்து விட்டதால் அதை எப்படி மீட்டெடுப்பார் என்கிற எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. 

வானதைப்போல

அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும், இந்த தொடர் சின்னத்திரை 'பாசமலர்' என கூறலாம். இந்த தொடர் 10.13 TRP புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இனியா

நான்காவது இடத்தில், 9.68 TRP புள்ளிகளுடன் இனியா தொடர் உள்ளது. இந்த தொடர் துவங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கிட்ட தட்ட இந்த தொடரும் ஆணாதிக்கத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. 

மிஸ்டர் மனைவி:

ஐந்தாவது இடத்தில்... 9.45 TRP புள்ளிகளுடன் மிஸ்டர் மனைவி தொடர் உள்ளது. இதில் செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த தொடரும் குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடராக மாறியுள்ளது. .

Advertisement

Advertisement

Advertisement