விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். மேலும் விஜய் தேவரகொண்டா ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப்படமான 'நுவ்விலா'மூலம் அறிமுகமானார். ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் இவர் பெல்லி சூப்புலுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதும் பெற்றார். இதிலிருந்து விஜய் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி, மகாநடி, கீத கோவிந்தம், மற்றும் டாக்ஸிவாலா, போன்றவை அதிக வசூல் செய்தது. மேலும் விஜய் தேவரகொண்டா தெலுங்கு தொலைக்காட்சி இயக்குனர், தேவரகொண்டா கோவர்தன் ராவ் மற்றும் தேவரகொண்டா மாதவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
மேலும் இவருக்கு திரையுலகில் அதிகபடியான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் படு தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இவரது அம்மா,அப்பாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!