• May 04 2024

பல லட்சங்களுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராமின் பெற்றோர்களை பார்த்துள்ளீர்களா..? வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராமின் பெற்றோர்களின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமாகியது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அத்தோடு இந்த சீசன் ஆரம்பமாகிய சில நாட்களிலேயே சண்டைகள், சர்ச்சைகள் ஆரம்பமானது. எனவே ரசிகர்கள் இந்த சீசனை  பெரிதும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

எனினும் இதைத்தொடர்ந்து இந்த சீசனில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக ஆரம்பத்தில் வலம் வந்தவர் ஜி.பி.முத்து. இவரின் வெகுளித்தமனமான பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் தன் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தினால் இவர் வீட்டை விட்டு தானாக வெளியேறினார்.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது வரை அசல், ஷாந்தி, மஹேஸ்வரி, ஷெரினா, குயின்சி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என குறிப்பிட்டிருந்த நிலையில் யார் வெளியேறுவார்கள் என ரசிகர்கள்  பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் இந்த வாரம் முதல் நபராக ராம் ராமசாமி குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார். மேலும் இது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ராம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளார்.

அத்தோடு ஒரு சிலர் இவர் பிக் பாஸ் வீட்டில் சும்மாவே இருப்பதாக விமர்சிக்க, மற்ற சிலர் இவர் அருமையான போட்டியாளர் என தெரிவித்து வந்தனர். இருப்பினும் தற்போது ராம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார்.

 பிக் பாஸ் வீட்டில் இருக்க ராமிற்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் ராம் அறுபது நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு அவர் பல லட்சங்களை சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகின்றது.இந்நிலையில்   தற்போது அவரின்  பெற்றோர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாக வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்... 




Advertisement

Advertisement

Advertisement