• Jul 27 2024

தர்ஷினி விஷயத்தில் கைது செய்யப்பட்ட குணசேகரன்.. அதிரடி காட்டிய கதிர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

குறித்த ப்ரோமோவில், கிள்ளி வளவன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் தர்ஷினி கடத்தல் விவகாரத்தில் குணசேகரனுக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி அவரை கைது செய்து போலீசார் அதிரடி காட்டுகின்றார்கள்.


இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விசாலாட்சி நானே எனது மகனை வெளியே கொண்டு வாரேன் என்று கூற, யாரும் செல்ல வேண்டாம் என்று கதிர் அவரை தடுக்க கிளம்புகிறார். இதன் போது நந்தினி கதரின் கைகளை பிடித்து அவரை தடுக்கிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

இதேவேளை, எதிர்நீச்சல் சீரியல் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement