தமிழ் திரையுலகில் இருந்து அரசியல் களத்துக்குள் நுழைந்து, புதிய பாதையை உருவாக்கிய விஜயின் இறுதி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
நீண்ட நாட்களாக திரையுலகிலும் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், தணிக்கைச் சிக்கல்களில் சிக்கி வெளியீடு தாமதமாகி வந்தது. அரசியல் சார்ந்த கருத்துகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதால், சில காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் பரிந்துரை செய்த நிலையில், தயாரிப்பு தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட வழியையும் நாடியதாக தகவல்கள் வெளியாகின.
இப்போது வந்துள்ள புதிய தகவலின்படி, அனைத்து சிக்கல்களையும் கடந்து படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படம் வெளியீட்டுக்கான பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பணியில் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி சென்றால், இந்த மாத இறுதிக்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மாமிதா பைஜு மற்றும் நரேன் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.
விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படும் இந்தப் படம், அவரது ரசிகர்களுக்கு ஒரு திரைப்பட அனுபவத்தை விட அதிகமான உணர்வுப்பூர்வ நிகழ்வாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நாளை நோக்கி ரசிகர்களின் கவனம் முழுவதும் திரும்பியுள்ளது. சமூக வலைதளங்களில் ஏற்கனவே ஹேஷ்டேக்குகள் பரவத் தொடங்கியுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ மீண்டும் திரையுலகை கலக்கத் தயாராகி வருகிறது.
Listen News!