• May 19 2024

வைல்ட் காட் என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸிற்குள் என்ட்ரி கொடுக்கவுள்ள ஜி.பி முத்து- அதுவும் எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கியது. ஆரம்பமாகிய நாளில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதனை அடுத்து ஒரு வாரம் கழித்து மைனா நந்தினி போட்டியாளராகக் களமிறஙகினார். இதனால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இவ்வாறு சூப்பராக ஓடிக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஜி.பி முத்து தனது குடும்பத்தைப் பார்க்க வேண்டும் மகனுக்கு உடம்பு சரியில்லை இதனால் என்னை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று கூறினார். இருப்பினும் இவரடைய மனத்தை மாற்ற பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பேசிப் பார்த்தனர்.


ஆனால் ஜி.பி முத்து தனக்கு பதவி புகழ் என்பனவற்றை விட குடும்பம் தான் முக்கியம் என வீட்டை விட்டு வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி முத்து தனது பிள்ளைகளுக்கு பிரியாணி வாங்கிக் கொடுக்கும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.


இந்த நிலையில் ஜி.பி முத்து வைல்ட் காட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவார் என்ற தகவலை தயாரிப்பளரும் பிக்பாஸ் விமசகருமான ரவீந்தர் கூறியிருக்கின்றார். மேலும் அதில் அவர் பிக்பாஸ் வீட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறும் மாற்றத்தை வைத்தே இதன் முடிவுகளைத் தீர்மானிக்க முடியும். இந்த முறை சீசன் ரூல்சிலையே இருக்கு வீட்டை விட்டு வெளியேறியவர்கள் வைல்ட்காட் என்ட்ரியாக வரலாம் என்று அதனால் ஜி.பி முத்து வைல்ட் காட் என்ட்ரியாக நுழைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்து.

Advertisement

Advertisement