• May 07 2024

"கோபியின் மனைவி மேடைக்கு வாங்க"... பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி.. கடைசியில் நடந்த ருவிஸ்ட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இவ்வாறு இருக்கையில் இந்த தொடருக்கென்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.

இதில் பாக்கியலட்சுமி எனும் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை கே.எஸ். சுசித்ரா.  பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவி பாக்கியலட்சுமியையும், ராதிகாவையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார். 

இதன் பின்னர் மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டார் கோபி. விவாகரத்து செய்ததோடு ராதிகாவையும் பல தடைகளை மீறி  திருமணம் செய்தும் கொண்டார் கோபி.


இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தனர்.


கோபியின் இரண்டாம் திருமணத்திற்கு பின்னர் பாக்கியலட்சுமி, தன்னுடைய மகன்கள், மகள், மருமகள், மாமியார், மாமனாருடன் அதே குடும்பத்தில் வசித்துவருகிறார். ஆனால் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றார்.


எனினும் தற்போது பாக்யலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் இரண்டு சீரியல்களின் மெகா சங்கமமாய் ஒளிபரப்பாகிக் கொண்டு உள்ளது.இதில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டிய ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். 


இந்நிலையில் தனியார் விடுதியில் நடக்கும்  நிகழ்ச்சியில் கோபி, விருது வாங்க மேடையேறுகிறார். கோபியின் மனைவியை தொகுப்பாளர் மேடைக்கு அழைக்க போவதாக தெரிவிக்கிறார்.இச்சூழலில் ராதிகா & பாக்கியலட்சுமி இருவரில் ஒருவரை தான் அழைக்கும் வாய்ப்பு இருப்பதால் யார் பெயரை அழைப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்படுகிறது. அப்போது தொகுப்பாளர் பாக்கியலட்சுமியை மேடைக்கு அழைக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே ராதிகா சென்றுவிடுகிறார். இவ்வாறு ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் சரியான பதிலடி என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement