• May 18 2024

ராதிகாவுடன் இருக்க முடியாது ,என் நிம்மதியே போச்சு என்று பாக்கியாவிடமே சொன்ன கோபி- யாருக்கும் தெரியாமல் எழில் எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். கோபி இனியா விட்டிட்டு போனதை நினைத்து ஓவராக குடித்து விட்டு கார் ஓர் ஓட்டுகின்றார். இடையில் வண்டி நின்றால் என்ன என்று கீழே இறங்கி பார்த்து விட்டு அப்படியே அங்கேயே கிடந்து புலம்புகின்றார்.

இதனால் அங்கு வரும் இருவர் கோபியின் போனை எடுத்து வீட்டுக்கு கோல் பண்ணுவோம் என்று பார்க்கும் கோது கோபி பாக்கியாவின் நம்பரை வைப் என்று சேஃவ் பண்ணி வைத்திருந்ததால் அவர்கள் பாக்கியாவிற்கு போன் பண்ணி நடந்ததைப் பேசுகின்றனர். விஷயம் அறிந்த பாக்கியா எழிலை அழைத்து உங்க அப்பா குடிச்சிட்டு ரோட்டில படுத்திருக்கிறாராம் என்று கூறுகின்றார்.


முதலில் எழில் எங்களுக்கு என்ன என்று நினைத்தாலும் பின்னர் மனம் கேட்காமல் பாக்கியாவைக் கூட்டிக் கொண்டு போகின்றார். அங்கே இருவரும் போய் பார்த்த போது கோபி நல்லாக் குடிச்சிட்டு சுய நினைவே இல்லாமல் இருந்தார். முதலில் இப்படியே விட்டிட்டு போவோம் என்று நினைத்த பாக்கியா பின்னர் அவங்க வீட்டிலையே விட்டிவோம் என்று சொல்லி கோபியை காரில் உட்கார வைத்து விட்டு காரை ஓட்டுகின்றார்.

எழில் தன்னுடைய பைக்கில் முன்னுக்குச் செல்ல பாக்கியா காரை ஓட்டிக் கொண்டு போகும் போது கோபி நிலை தெரியாமல் பாக்கியா பெண் ட்ரைவர் என்று நினைச்சு,இப்போ பொண்ணுங்க எல்லாம் மாறிட்டாங்க பாக்கியா என்று எங்க பக்கத்து வீட்டில இருக்கிறவ இப்போ ரொம்ப கெத்தா மாறிட்டா இங்கிலீஸ் எல்லாம் பேசுறா என பாக்கியாவைப் பற்றி புகழ்கின்றார்.


பின்னர் ராதிகாவைப் பற்றியும் சொல்கின்றார். ராதிகா வந்ததுக்கு அப்பிறம் தான் எனக்கு நிம்மதியே இல்லாமல் போச்சு என்று சொல்ல  பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.





Advertisement

Advertisement