• May 18 2024

வீட்டுக்கு வந்த பழனிச்சாமியை அசிங்கப்படுத்திய கோபி- ராதிகாவை கண்டபாட்டுக்கு திட்டிய ஈஸ்வரி- மன்னிப்புக் கேட்ட பாக்கியா

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

பழனிச்சாமி இனியாவுக்கு எக்ஸ்ஷாம் என்பதால் ஹாஸ்லி பேனாவைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். அந்த பேனாவை வாங்கிய இனியா கோபியிடம் காட்ட கோபி அந்தப் பேனாவை வாங்குவது போல வாங்கி கீழே போட்டு உடைத்து விடுகின்றார். இதனால் எல்லோரும் அதிர்ச்சியடைய இனியா கோபியைத் திட்டுகின்றார்.


இருந்தாலும் கோபி தெரியாமல் விழுத்தி விட்டதாக சொல்லி தான் வாங்கி வைத்திருந்த புதிய பேனாவைக் கொடுக்கின்றார். அந்த பேனாவை வாங்கிய இனியா சந்தோஷப்பட்டுக் கொண்டு கோபியுடன் ஸ்கூலுக்கு செல்கின்றார். இதனால் காரில் ஏற முதல் கோபி இனியாவிடம் இனிமேல் யாரும் எது தந்தாலும் வாங்க கூடாது என அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.

தொடர்ந்து பழனிச்சாமியிடம் நடந்ததுக்காக பாக்கியா மன்னிப்புக் கேட்கின்றார். பழனி அற்கு பரவாயில்லை என்று சமாளித்து விட்டு ஒரு கல்யாண ஆடர் வந்திருக்கு ஐயாயிரம் பேருக்கு சமைக்கணும் என்று சொல்ல பாக்கியா ஐயாயிரம் பேருக்கு சமைக்கனுமா. அப்படி என்றால் அங்க தங்கி நின்று சமைக்கனுமே.


வீட்டில இருக்கிறவங்க விட்டிட்டு எப்படி அப்படி போறது, என் கூட வருகிறவங்களும் அவங்க குடும்பத்தை விட்டிட்டு வரணுமே இந்த ஆடர் வேணாம் என்று சொல்ல பழனி பரவாயில்லை வேற ஒரு நல்ல ஆடரை பார்த்து பண்ணிட வேண்டியது தான் என்று சொல்கின்றார். தொடர்ந்து ஈஸ்வரியும் ஜெனியும் இருந்து பேசிட்டு இருக்கும் போது ராதிகாவின் அம்மா ராதிகாவின் அண்ணாவையும் அண்ணியையும் கூட்டிட்டு வருகின்றார்.

இவர்களைப் பார்த்த ஈஸ்வரி கடுப்பாகி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க கோபி ராதிகாவை வரவைத்து அவர்களை மேலே கூட்டிட்டு போகின்றார்.மேலே இருந்து அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் ஈஸ்வரி என்ன செய்வது என்று யோசிக்கின்றார். தொடர்ந்து கிச்சனில் பாக்கியா சமைத்துக் கொண்டிருக்கும் போது ராதிகா வந்து எனக்கு கெஸ்ட் வந்திருக்கிறாங்க.


கிச்சனை கொஞ்சம் விட முடியுமா? எனக் கேட்க பாக்கியா நானும் சமைத்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று சொல்ல ஈஸ்வரி ராதிகாவை கண்டபாட்டுக்கு திட்டுகின்றார். இந்த நேரம் ராதிகாவின் அம்மா கீழே வந்து போலீஸ் சொன்னதெல்லாம் உங்களுக்கு நினைவில்லையா என ஈஸ்வரியை மிரட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement